Header Ads



முஸ்லிம் அரசியல்வாதிகள் நாளை, ஞாயிறு ரணிலுடன் முக்கிய பேச்சு - பதவிகளை பெறுவது பற்றி தீர்மானமில்லை

- எஸ்.எம்.எம்.முர்ஷித் -

அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்த அமைச்சர்களை மீண்டும் பதவிகளை ஏற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி மீண்டும் அழைத்துள்ள நிலையில் நாங்கள் பதவிகளை பெற்றுக் கொள்வது தொடர்பாக எந்ததீர்மானங்களும் இதுவரை எடுக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் செயித் அலிஷாஹிர் மௌலானா தெரிவித்தார்.

இன்று (சனிக்கிழமை) மாலை ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கம்பரலிய வேலைத்திட்டத்தில் இருபத்தைந்து லட்சம் ரூபாவிற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்ததன் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை துறக்கும் போது முன்வைக்கப்பட்டிருந்த கோறிக்கைகளில் சில கோறிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருந்தாலும் சில கோறிக்கைகள் நிறைவற்றப்படாமல் இருப்பதனால் இவ் விடயங்கள் தொடர்பாக பிரதமர் அவர்களை முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள்; நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை அலரி மாலிகையில் சந்திக்க இருக்கின்றோம்.

இதில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் எல்லை பிரச்சினை, தோப்பூர் உள்ளுராட்சி சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் தொடர்பான கோறிக்கைகள் முன்வைத்துள்ளோம் இவைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பாகவும் பிரதமருடன் பேசவுள்ளோம் என்றும் தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச சபையின் மீராவோடை வட்டார உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீனின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் செயித் அலிஷாஹிர் மௌலானாவினால் கம்பரலிய வேலைத்திட்டத்தில் ரான்போமர் குறுக்கு வீதிக்கு வடிகானுக்கும் வீதிக்குமாக இருபது லட்சம் ரூபாவும் மீறாவோடை ஆற்றங்கரை வீதிக்கு கொங்ரீட் இடுவதற்காக ஐந்து லட்சம் ரூபாவும் ஒதுபக்கப்பட்டு அதற்கான வேலைகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதே Nவைளை மீறாவோடை ரிழ்வான் பள்ளிவாசலை பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீனின் வேண்டுகோளுக்கிங்க பாராளுமன்ற உறுப்பினரால் ஒரு லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டு அப்பணத்தில் நிவர்த்தி செய்யப்பட்ட வேலைகளை பார்வையிட்டதுடன் மேலும் பள்ளிவாயலின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு உதவுவதாகவும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.