நான் சுதந்திரக் கட்சியிலேயே இருக்கிறேன் - குமார வெல்கம
ராஜபக்சவினருடன் இணையும் நபர்களுக்கு அமைச்சர் பதவிக்கு அப்பால் செல்ல முடியாது எனவும் அதனால் தான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கத்துவத்தை பெறாது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலேயே இருப்பதாகவும் நாடளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவதை எதிர்க்கும் அதேவேளை குடும்ப ஆட்சியையும் எதிர்க்கின்றேன். இதனால், 30 ஆண்டுகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்தவாறு அரசியல் ஈடுபட்டது போல், தொடர்ந்தும் ஈடுபடுவேன்.
நான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணையவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்தவாறே அரசியலில் ஈடுபட்டேன்.
மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச, சமல் ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, சசிந்திர ராஜபக்ச, நாமல் ராஜபக்ச என ஒரு ராஜபக்ச சங்கிலி தொடரே இருக்கின்றது. இதனால், அவர்களுடன் இணையும் நபர்கள், அமைச்சர் பதவிகளுக்கு அப்பால் செல்ல முடியாது எனவும் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment