Header Ads



மூளை செயலிழந்த பிள்ளையின் 2 சிறுநீரகங்களையும், ஒருவருக்கு மாற்றி குருணாகல் வைத்தியசாலை சாதனை


குருணாகல் போதனா வைத்தியசாலையில் முதல் முறையாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்கிறார் வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சரத் வீரபண்டார. 

குறித்த அறுவை சிகிச்சையை நடத்திய வைத்தியர்கள் குழுவுடன் வைத்தியசாலையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். 

மூளை செயலிழந்த பிள்ளை ஒன்றின் இரண்டு சிறுநீரகங்களையும் சிறுநீரக பாதிப்புள்ள ஒருவருக்கு மாற்றியதாக பணிப்பாளர் கூறினார். 

அது வைத்தியசாலையின் வரலாற்றில் முக்கியமான அறுவை சிகிச்சை என்று அவர் கூறினார்.

அந்த அறுவை சிகிச்சைக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து வைத்தியர்கள் மற்றும் தாதிமார்உள்ளிட்ட அனைவரினதும் அர்ப்பணிப்பு காரணமாக இந்த சத்திர சிகிச்சை வெற்றியளித்ததாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சரத் வீரபண்டார கூறினார். 

No comments

Powered by Blogger.