Header Ads



'சிறந்த பொலிஸ் அதிகாரி' விருதுகளை வென்ற, பெண் பொலிஸ் அதிகாரி குற்றவாளியான பரிதாபம்

(ரெ.கிறிஷ்­ணகாந்)

பாலியல் வன்­பு­ணர்­வுக்கு உள்­ளாக்­கப்­ப­ட­வில்லை என மருத்­துவ பரி­சோ­த­னை­களில் தெரிய வந்தும் 14 வய­தான சிறு­மியைத் தடுப்­புக்­கா­வலில் வைத்து விசா­ரித்­தமை மற்றும் அழுத்தம் வழங்­கி­யமை உள்­ளிட்ட குற்­றச்­சாட்­டு­களில் சிறந்த பொலிஸ் அதி­கா­ரிக்­கான விரு­து­களை வென்ற, மாத்­தறை மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் பணி­ய­கத்தின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் வருணி போக­ஹ­வத்த குற்­ற­வாளி என உயர் நீதி­மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிறு­மிக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்­தமை மற்றும் அவ­ருக்கு ஏற்­பட்ட அவ­மா­னங்­க­ளுக்கு ஒரு இலட்சம் ரூபாவை நஷ்­ட­ஈ­டாக செலுத்­து­மாறும், அதற்கு மேல­தி­க­மாக அர­சாங்­கத்துக்கு 50 ஆயிரம் ரூபாவை அப­ரா­த­மாக செலுத்­து­மாறும் பொலிஸ் பரி­சோ­தகர் வருணி போக­ஹ­வத்­த­வுக்கு நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது. மேற்­படி நஷ்­ட­ஈட்டுத் தொகையை 12 மாதங்­க­ளுக்கு 4 தவ­ணை­களில் பாதிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ருக்கு செலுத்­து­மாறு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

அக்­கு­ரஸ்ஸ பிர­தேச சபையின் (அப்­போ­தைய) தலைவர் அல்­லது வேறு தரப்­பி­னரால் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உள்­ளாக்­கப்­பட்டார் என, கடந்த 2012 ஆம் ஆண்டில், 14 வய­து­டை­ய­வ­ராக இருந்த மாத்­தறை அக்­கு­ரஸ்ஸ, நில்­மெனிக் கமவைச் சேர்ந்த இஷாரா அஞ்­சலி என்ற சிறு­மியை அவ­ரது வீட்டில் வைத்து பொலிஸ் பரி­சோ­தகர் வருணி போக­ஹ­வத்த தலை­மை­யி­லான மாத்­தறை பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பிரி­வினர் கைது­செய்­தனர்.

அதன்­போது, தான் எவ­ரு­டனும் பாலியல் தொடர்­பு­களை கொண்­டி­ருக்­க­வில்லை என அச்­சி­றுமி தெரி­வித்­தி­ருந்த போதிலும் பொலிஸார் அவரை மாத்­தறை பொலிஸ் நிலை­யத்­துக்கு அழைத்துச் சென்று, பல்­வேறு வகையில் அழுத்­தங்­களை பிர­யோ­கித்து போலி வாக்­கு­மூலம் பெறும் நோக்கில் தொடர்ந்தும் விசா­ர­ணை­க­ளுக்கு உள்­ளாக்­கி­யி­ருந்­த­தாக தெரி­ய­வந்­தி­ருந்­தது. சிறு­மியின் உற­வி­ன­ரல்­லாத ஒரு­வரால் வழங்­கப்­பட்ட முறைப்­பா­டொன்றின் பிர­கா­ரமே இது குறித்த விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருந்­தன.

இச் சிறுமி 4 தட­வைகள் மருத்­துவ பரி­சோ­த­னை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த போதிலும், அப்­ப­ரி­சோ­த­னை­களின் இறு­தியில் சிறுமி பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உள்­ளா­க­வில்லை என உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. எனினும் சிறு­மியை தொடர்ந்தும் பொலிஸ் சிறைக்­கூ­டத்தில் சட்­ட­வி­ரோ­த­மான முறையில் அடைத்து வைத்து அந்தப் பொலிஸ் அதி­காரி விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்தி வந்­த­தாக தெரி­ய­வந்­தி­ருந்­தது.

இந்­நி­லையில், பாதிக்­கப்­பட்ட சிறுமி மற்றும் அவ­ரது தாயாரால் SC (FR) 677/2012 என்ற இலக்­கத்தின் கீழ் பொலிஸ் பரி­சோ­தகர் வருணி போக­ஹ­வத்­த­வுக்கு எதி­ராக, உயர் நீதி­மன்றில் அடிப்­படை உரிமை மீறல் மனு ஒன்று தாக்கல் செய்­யப்­பட்­டது.

இந்த மனு புவ­னேக அலு­வி­ஹார, பிரி­யந்த ஜய­வர்­தன மற்றும் விஜித் மலல்­கொட ஆகிய மூவ­ர­டங்­கிய நீதி­ய­ர­சர்கள் குழாம் முன்­னி­லையில் விசா­ர­ணை­க­ளுக்கு எடுத்­து­கொள்­ளப்­பட்­டது. அதற்­க­மைய, பிர­தி­வா­தி­யான பொலிஸ் அதி­கா­ரியின் செயற்­பாட்­டினால் அர­சி­ய­ல­மைப்பின் 11, 12(1), 13(1), 13(2) ஆகிய சரத்­து­களில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள அடிப்­படை உரி­மைகள் மீறப்­பட்­டுள்­ள­தாக உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ர­சர்கள் குழாம் கடந்த புதன்­கி­ழமை அறி­வித்­தது.

சட்­டத்தை அமுல்­ப­டுத்த வேண்­டிய அதி­கா­ரிகள், தமது அதி­கா­ரத்தை தவ­றாக பிர­யோ­கித்து பொது­மக்­களை பாதிப்­ப­டைய செய்யும் பெரும்­பா­லான சம்­ப­வங்கள் நாட்டில் இடம்­பெ­று­வ­தா­கவும், எனினும், அவ்­வா­றா­ன­வை­களில் சொற்­ப­மா­ன­வையே சட்­டத்­துக்கு முன் கொண்டு வரப்­ப­டு­கி­றது. விசே­ட­மாக சிறு­வர்­களை கைது செய்தல், தடுத்­து­வைத்தல், சிறை­வைத்தல் உட்­பட, சட்டம் மற்றும் அர­சி­ய­ல­மைப்­பினால் பொது­மக்­க­ளுக்கு உரித்­தாக்­கப்­பட்­டுள்ள அடிப்­படை உரி­மைகள் மீறப்­ப­டாத வகையில் அதி­கா­ரத்தை உப­யோ­கிக்கும் விதம் தொடர்­பான ஆலோ­சனைக் கோவை­யொன்றை உரு­வாக்­கு­மாறு இவ்­வ­ழக்கின் தீர்ப்பில் உயர்­நீ­தி­மன்றம் பொலிஸ் மா அதி­ப­ருக்கு உத்­த­ர­விட்­டது.

அத்­துடன், கைது­செய்­யப்­பட்ட சந்­தே­க­ந­பர்கள் 24 மணித்­தி­யா­லங்­க­ளுக்குள் நீதிவான் முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். கைது­செய்­யப்­பட்­ட­வரை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்க நீதி­வானின் அனு­மதி பெற­வேண்டும் என தண்­டனைச் சட்­டக்­கோ­வையின் 122(21) சரத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. எனினும், மனு­தா­ர­ரான சிறுமி தொடர்பில் இதில் எந்த நடை­மு­றை­களும் பின்­பற்­றப்­ப­ட­வில்லை.

இவை­ய­னைத்தும், மாத்­தறை பொலிஸ் நிலை­யத்தின் அப்­போ­தைய பொலிஸ் பொறுப்­ப­தி­கா­ரியின் அனு­ம­தி­யு­ட­னேயே நடந்­துள்­ளதால், குறித்த பொலிஸ் அதி­காரி மற்றும் பொலிஸ் பொறுப்­ப­தி­காரி ஆகியோர் சிறு­மியின் 12(1) அடிப்­படை உரி­மை­களை மீறி­யுள்­ள­தாக நீதி­ய­ர­சர்கள் குழாமின் 24 பக்கத் தீர்ப்பில் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பாதிக்­கப்­படும் வேளையில் 14 வய­து­டை­ய­வ­ராக இருந்த மனு­தாரர், தற்­போது திரு­ம­ண­மாகி குழந்தை பிர­ச­வத்­துக்கு தயார் நிலை­யி­லுள்ள 21 வய­தான யுவ­தி­யாவார்.

மனு­தா­ரர்கள் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ஜே.சி,வெலி­அ­முண, சட்­டத்­த­ரணி புலஸ்தி ஹேவா­மான்­ன­ஆ­கியோர் ஆஜ­ரா­கி­யி­ருந்த அதே­வேளை, எதிர்­ம­னுதாரர் தரப்பு சார்பில் பிரதி சொலி­ஸிட்டர் ஜெனரல் வருணி ஹெட்­டிகே டி சில்வா ஆஜராகியிருந்தார். 

இந்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்த, 2017 ஆம் ஆண்டில் சிறந்த பெண் பொலிஸ் அதிகாரிக்கான விருதை வென்றதுடன் 2001 ஆம் ஆண்டில் ஜனாதிபதி விருதையும் வென்றார். அத்துடன், சிறுவர் மற்றும் மகளிருக்கு இடம்பெறும் வன்முறைகளுக்கு எதிரான பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்தவராவார்.

இந்­நி­லை­யில்­பொலிஸ் பரி­சோ­தகர் வருணி போக­ஹ­வத்­த­வுக்கு வழங்­கப்­பட்ட விரு­து­களை மீளப்­பெ­று­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும், விரைவில் அவர் உள்­ளக விசா­ர­ணை­யொன்­றுக்கும் முகங்­கொ­டுப்பார் எனவும் உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.