Header Ads



நான் முஸ்லிமாக பிறந்திருந்தால், சஹ்ரான் போன்றவராக மாற வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் - ஞானசார

உயிர்த்த ஞாயிறு தினத்தில் தற்கொலை குண்டை வெடிக்க செய்த சஹ்ரான் ஹசீம் இலங்கையின் இளைஞன் எனவும், முஸ்லிம் இனத்தவராக பிறந்திருந்தால் தானும் சஹ்ரான் போன்றவராக மாற வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் எனவும் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

காலியில் உள்ள விகாரை ஒன்றில் நேற்று நடைபெற்ற சமய நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், இலங்கையின் சம்பிரதாயபூர்வமான முஸ்லிம் மக்களுடன் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

இந்த நாடு ஒரு வீடு. இந்த வீட்டுக்குள் விஷ பாம்பு நுழைந்திருந்தால் அனைவரும் இணைந்து அந்த விஷ பாம்பை அழிக்க வேண்டும்.

எனது மனம் துறவரம் பூண்டிருந்தாலும் தேசிய பிரச்சினையின் போது எனது பங்களிப்பு வித்தியாசமானது என ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

9 comments:

  1. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இனத்துக்கு சார்பாகவும்,எதிராகவும் பேசும் இவரின் குறிக்கோள் மற்றும் நோக்கம்தான் என்னே? தானும் குழம்பி மக்களையும் குழப்ப முனைவது பையித்தியத்தின் உச்சக் கட்டம்.ஒரு நாளைக்கு அவர் பிரபாகரன் போலவும் இன்னோரு நாளைக்கு சஹ்ரான் போலவும் பிறக்கும் பேச்சுக்கள் இவரின் உன்மையான மன நோயை தெளிவாக காட்டுகிறது.

    ReplyDelete
  2. Making comments on racist / fool also reflecting on those who are making it. "JUST IGNORE".

    وَعِبَادُ الرَّحْمَٰنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا)
    And the servants of the Most Merciful are those who walk upon the earth easily, and when the ignorant address them [harshly], they say [words of] peace, (Alfurqan 63)

    ReplyDelete
  3. முஸ்லீம்களுக்கு அநியாயம் நடக்குது என்றும், அதனாலதான் ஸஹ்ரான் இந்தநிலைக்கு வந்ததென்றும் சொல்லாம சொல்லுராயல்.

    ReplyDelete
  4. ஞானசாரரே, தாங்கள் உண்மையையே கூறியுள்ளீர்கள்.

    ReplyDelete
  5. No my dear comments holders. Mr. Nanasara very intelligent not only he well planted spy of some foreignd governments and leading deductiv agencies.

    ReplyDelete
  6. Iwan japan il adikam penkalidam powan...
    Japan soothu adikirathula killati....iwan penkaluku adimay

    ReplyDelete
  7. இவர் சொல்லுவது உண்மையென்றால் இவருக்கு தெரியும் பெரும்பான்மை இனத்தில்(மாதா இனவாதிகள் இருக்கிறார் என்று . இவறும் பயப்படுகிறார்

    ReplyDelete
  8. முஸ்லீம்களை தீவீரவாதிகல் என்று சித்தரிக்கும் இஸ்லாத்தின் எதிரிகள் ,தற்போது அவர்கள் ஒரு உண்மையை புரிந்துகொண்டார்கள் பாரம்பரை முஸ்லீம் ,தவ்ஹீத் முஸ்லீம் என்று இரு சாரார் இருக்கிறார்கள் இதில் தவ்ஹீத்வாதிகள் இஸ்லாத்தை அதன் தூயவடிவில் கடைபிடிக்க சொல்கிறார்கள் ஆகவெ இவர்களை தான் தீவரவாதிகள் என்று சொல்ல வெண்டும் ..

    ReplyDelete

Powered by Blogger.