Header Ads



ஹக்கீமும், றிசாத்தும் ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்டுவிப்பதை முழுநாடும் அறியும்

இன்று ஐக்கிய தேசியக் கட்சியை ரவுப் ஹக்கீமும், ரிசாட் பதியுத்தீனும் ஆட்டுவதை முழு நாடும் அறிந்தே வைத்துள்ளது என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மம்பில தெரிவித்துள்ளார்.

சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தல் நடாத்தப்பட்டால், முஸ்லிம் சிறுபான்மைக் கட்சிகளிடம் மீண்டும் கையேந்தும் நிலை உருவாகும், இந்நிலைக்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத்தைக் கலைத்தால், அது ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாய்ப்பாக அமையும். அரசாங்கம் இருக்கும் நிலையில் தேர்தலுக்கு செல்வது அவர்களுக்கு களநிலைமைகளை சாதகமாக்கும்.

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் பொதுத் தேர்தல் ஒன்றை நடாத்தினால், சிறுபான்மை கட்சியின் பின்னால் செல்ல வேண்டிய தேவை ஏற்பட மாட்டாது. இன்று ஐக்கிய தேசியக் கட்சியை ரவுப் ஹக்கீமும், ரிசாட் பதியுத்தீனும் ஆட்டுவதை முழு நாடும் அறிந்தே வைத்துள்ளது.

இதனால், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றுக்குச் செல்வதை நாம் எதிர்க்கின்றோம். ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவானதை தாம் செய்ய வேண்டியதில்லை என்றார்.

1 comment:

  1. அப்போ பொலிசாரால் மினுவாங்கொடை கலவரத்தினை ஏற்பாடு செய்த உங்கள் கட்சியின் பிரதி தலைவரும் தற்போது ஒழிந்து கொண்டுள்ள முன்னால் பாடகரை பற்றி என்ன உங்களின் கருத்து

    ReplyDelete

Powered by Blogger.