முஸ்லிம் அரசியல்வாதிகளின் வெற்றிடங்களுக்கு, புதியவர்களை நியமிக்காதிருக்க ரணில் தீர்மானம்
அமைச்சரவை அமைச்சு, இராஜாங்க அமைச்சு மற்றும் பிரதியமைச்சுகளிலிருந்து முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட்டாக பதவி விலகியதையடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்கு புதியவர்களை நியமிக்காதிருக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக ஆளுங்கட்சி வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
எனவே, அமைச்சுகளின் செயலாளர்கள் ஊடாகவே, மேற்படி அமைச்சுகளில் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும், இதற்கான கண்காணிப்பை பிரதமர் அலுவலகம் மேற்கொள்ளும் என்றும் தெரியவருகின்றது.
முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையை ஒரு மாதத்துக்குள் நிறைவுக்கு கொண்டு வந்து, குற்றமிழைக்காதவர்களுக்கு மீண்டும் அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு ஐ.தே.கவின் சிரேஷ்ட உறுப்பினர்களும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Excellent decision,
ReplyDelete