பாராளுமன்றம் மீண்டும் ஒத்திவைக்கப்டுமா..?
நாடாளுமன்றத்தின் கூட்ட அமர்வுகள் அவசரமாக ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக சாட்சிகளை விசாரிக்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இரகசியமான பாதுகாப்பு தகவல்கள் வெளியாகியமை தொடர்பில் ஜனாதிபதி கடும் அதிருப்தியில் இருப்பதே இதற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.
அத்துடன் குற்றப் புலனாய்வு திணைக்களம் உட்பட முன்னணி பாதுகாப்பு நிறுவனங்களின் பிரதானிகளை தெரிவுக்குழுவிற்கு அழைத்து சாட்சியம் பெற தீர்மானித்திருந்த போதிலும் அந்த தீர்மானம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கூட்ட அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டால், மீண்டும் கொள்கை அறிக்கையை முன்வைத்து மீண்டும் கூட்டப்படும் வரை நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வருடத்துடன் உங்களுடைய அரசியல் வாழ்க்கைக்கு முற்று புள்ளி வைத்து , வீட்டுக்கு அனுப்புவோம்.
ReplyDeleteமடையன் எல்லாம் ஆட்சிக்கி வந்த என்ன ஆகும் என்பதை மக்கள் பார்த்து விட்டர்ஹல்