Header Ads



பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல்கள் தொடர்பாக SLMDI UK இன் முக்கிய அறிவித்தல்


இலங்கையில் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களை பற்றி நாம் அனைவரும் நன்கறிவோம். 

இன மத வேறுபாடின்றி நாட்டின் அமைதியைக் குலைக்கின்ற அனைத்து பயங்கரவாத, அரசியல் சக்திகளையும் எமது அமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது.  அதே நேரம் இத்தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களும் இயல்பு நிலைமைக்கு திரும்புவதற்கு எமது அமைப்பு நேரடியாகவும் திரை மறைவிலும் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றமையையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.  

SLMDI UK மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒரு அமைப்பு என்ற வகையிலும் பாதிக்கப்பட்ட மக்களின் கஷ்ட நஷ்டங்களின் பங்கெடுக்க வேண்டிய அவசியம் இருப்பாதாலும் இம்முறை (9/6/19) நடாத்தவிருந்த பெருநாள் ஒன்றுகூடலினை இரத்துச் செய்துள்ளதுடன் ஒரு பாரிய நிதிஉதவியினை வழங்கவும் தீர்மாணித்துள்ளது.  

அத்துடன் உலகெங்கும் வாழ்கின்ற இலங்கை முஸ்லிம்கள் அனைவரையும் தங்களது பெருநாள் கொண்டாட்டங்களை ஆடம்பரமின்றி நடாத்துமாறும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் இயன்ற பொருளாதார உதவியை வழங்குமாறும் SLMDI UK பணிவாக வேண்டிக்கொள்கின்றது.  - 

SLMDI UK

1 comment:

Powered by Blogger.