மஹ்ரம் இல்லாது சிறைச்சாலைக்கு, செல்லவேண்டிய நிலை ஏற்படலாம் - சட்டத்தரணி நதீஹா அப்பாஸ்
முகத்தை மூடி ஆடையணிவது சட்டரீதியாகத் தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில் கற்பிட்டியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் முகத்தை மறைத்து ஆடையணிந்து சென்றபோது அவர் கற்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். 17 வயது நிரம்பிய அந்தப் பெண் கர்ப்பிணியாவார்.
தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பம் அனுப்புவதற்காக அவர் புகைப்பட நிலையத்துக்கு புகைப்படம் எடுத்துக்கொள்ள சென்றபோது வீதியில் கடமையிலிருந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட குறிப்பிட்ட பெண் கற்பிட்டி பொலிஸாரினால் புத்தளம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது புத்தளம் மேலதிக நீதிவான் அவரை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (இன்று) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
சந்தேக நபர் தொடர்பில் விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவசர கால சட்டத்தின் கீழ் அடிப்படைவாத அமைப்புடன் தொடர்புள்ளவரா என்பது தொடர்பில் விசாரணை நடைபெறுவதாகவும், முன்னாள் குற்றச் செயல்கள் ஏதும் இவருக்கெதிராக இருப்பதா என்பது தொடர்பில் அறிக்கை பெற்றுக்கொள்ளவிருப்பதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்கள் 2120/5, 2121/1 மற்றும் 2123/4 என்பவற்றின் பிரகாரம் இது தண்டனைக்குரிய குற்றம் எனவும் பொலிஸார் சம்பந்தப்பட்ட பெண்ணை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் முஸ்லிம் பெண்கள் விவகாரங்களில் சட்ட ஆலோசனைகளை வழங்கிவரும் சட்டத்தரணி நதீஹா அப்பாஸ் கருத்து தெரிவிக்கையில்,
முகத்தை மறைத்து ஆடை அணிவது எமது நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறிச்செயற்படுவது தண்டனைக்குரிய குற்றமாகும். முஸ்லிம்களுக்கு சவால்கள் நிறைந்த இக்கால கட்டத்தில் முஸ்லிம் பெண்கள் தேவையற்ற சிரமங்களுக்குத் தம்மை ஆளாக்கிக் கொள்ளக்கூடாது.
முகத்தை மூடுவதாயின் முஸ்லிம் பெண்களாகிய நீங்கள் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவீர்கள். இதனால் பல அசௌகரியங்களுக்கு உள்ளாகுவீர்கள். முகத்திரை சட்ட ரீதியாக தடை செய்யப்பட்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் முகத்தை மூடி ஆடை அணிந்தால் நீங்கள் மஹ்ரம் இல்லாது சிறைச்சாலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம்.
பெண் என்ற வகையில் முஸ்லிம் பெண்களின் சிரமங்களை நான் அறிகிறேன். 10–15 வருடங்களாக முகத்தை மூடி ஆடை அணிந்து விட்டு திடீரென அமுலுக்கு வந்த வர்த்தமானி அறிவித்தலையடுத்து எப்படி முகத்தை திறந்து கொண்டு செல்வது. இது மிகவும் சிரமமான விடயம் தான். என்றாலும் முகத்திரை அணிந்து கைது செய்யப்பட்டால் கண்ணீருடனே சிறையில் இருக்க வேண்டும்’ என்றார்.
சரியாகச் சொன்னீர்கள்.
ReplyDeleteகர்ப்பிணிப் பெண் அதுவும் சிறையில்,17 வயது.17 வயதில் அந்த பிள்ளை கர்ப்பிணி 16 வயதில் திருமணம்.எப்படி கல்வியறிவு இருக்கும் கல்வியறிவு இல்லாமல் எவ்வாறு அறிய முடியும் நாட்டு நடப்புகளை எவ்வாறு தெரிந்து கொள்வது.என்வே முகம் மூட வேண்டாம் என அரசாங்கம் அறிவித்தது கூட தெரியாது.இதற்கெல்லாம் மிக முக்கிய காரணம் எமது சமூகம் பெண் பிள்ளைகளின் கல்வியின் காட்டும் பொடு போக்குத்தனம்.இனியாவது பிள்ளைகளின் கல்விக்கு Muslim பெற்றோர்கள் அதி முக்கியத்துவம் வழங்குங்கள்.
ReplyDeleteஅப்போ ஏன் சிறு வயது சிறுமிகளை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும். பக்குவம் வந்த பிறகு திருமணம் செய்ய வேண்டும்.
ReplyDelete17 வயது பெண் திருமணம் செய்வதில் எந்த தப்பும் இல்லை அல்லாஹ் வரையரை கொடுக்காத போது பெண்னிர் திருமண வயதை தீர்மானிக்க எந்த மனிதனுக்கும் உரிமை இல்லை எனவே இது தவறு என்று சொல்வது தான் தப்பு
ReplyDeleteகூமுட்டை உன் மகள் 4 வயது பெண் குழந்தையை 40 வயதுக்கு திருமணம் முடித்து கொடு மொக்கு
ReplyDelete@Rizard மாசாஹினா ராத்தாக்கு 42 வயசு அப்ப கல்வி அறிவு என்ன ஆச்சி? முதல் உங்கட அறிவை விசாலமாக்குங்கள். இலங்கையில் எழுத்தறிவு வீகிதம் 95% விட அதிகம் இருந்தும் இனவாதம் இங்கதான் அதிகமாக இருக்கு நீங்க சொல்ற மணண கல்விக்கும் உலக கல்விக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆய்வாளர்கள் சொல்கிறார்கள் பருவ வயதில் திருமணம் முடிப்பதால் விவச்சாரம்,கற்பழிப்பு குறையும் மற்றும் சாதனைமட்டம் அதிகமாக இருக்கும் என்று. வெறுமனே பாடசாலை கல்வியை படித்தால் இன்றைய படிப்பறிவு நாடான இலங்கை நிலைதான் வரும்.இது ஒருபச்ச இனவாதம் நடக்குது நாம குருடர்களாய் இருக்கிறோம்.முதல் உங்க அறிவை இதுக்கு பயன்படுத்துங்கள்.
ReplyDeleteIslam did not give minimum age for marriage that doesn't mean we cannot make government law for that. We can change the law as per the situation. Quran or Sunnah doesn't provide complete law for the later Caliphs who made their own law based on what is good for the society. for example Abu Bakr(RA) decided to complile the Quran as a book while there Prophet or Quran did not say anything about it. and so many civil laws were made by the muslim rulers when a new problem arises. We obviously know that child marriage in this era is harm to our society.
ReplyDeleteIslam did not give minimum age for marriage that doesn't mean we cannot make government law for that. We can change the law as per the situation. Quran or Sunnah doesn't provide complete law for the later Caliphs who made their own law based on what is good for the society. for example Abu Bakr(RA) decided to complile the Quran as a book while there Prophet or Quran did not say anything about it. and so many civil laws were made by the muslim rulers when a new problem arises. We obviously know that child marriage in this era is harm to our society.
ReplyDelete