விழித்திருந்த முஸ்லிம் ஊர்கள் - தறாவிஹ் தொழுகைகள் ரத்து
நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு, இன்று செவ்வாய்கிழமை அதிகாலை வேளையில் முஸ்லிம் ஊர்கள் தாக்கப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக, பல முஸ்லிம் பிரதேசங்கள் விழிப்பு நிலையில் இருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையிலும், பௌத்தசிங்கள வன்முறையாளர்கள் தாக்குதல் மேற்கொள்ளலாம் என்ற அச்சத்தினாலும், பல முஸ்லிம் பிரதேசங்களில் தறாவிஹ் தொழுகை ரத்துச் செய்யப்பட்டிருந்தது.
இளைஞர்கள் தமது பிரதேசங்கள் காப்பதில் தயார் நிலையில் இருந்துள்ளனர்.
எனினும் இறைவன் உதவியுடன், நேற்று நள்ளிரவும், இன்று அதிகாலையும் எத்தகைய விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறவில்லை என அறிய வருகிறது.
Post a Comment