வவுனியாவில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் வெளிநாட்டு, அகதிகளை தங்கவைப்பதற்கு பிக்குமார் எதிர்ப்பு
வவுனியாவில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட வெளிநாட்டு அகதிகளை தங்க வைப்பதற்கு பௌத்த குருமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வவுனியா, மடுக்கந்தை விகாராதிபதி தலைமையில் நகரசபை மண்டபத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த பௌத்த குருமார்,
இங்கு அகதிகளாக வந்திருப்பவர்கள் விபரங்கள் அரச அதிபருக்கோ, பிரதேச செயலாளருக்கோ தெரியவில்லை. அப்படியென்றால் யார் இவர்களை இங்கு அழைத்து வந்தார்கள். ஐஎஸ் மற்றும் தெளபிக் ஜமாத் அமைப்பினர்கள் கூட இவர்களூடாக உள்நுழைந்திருக்க கூடும் என சந்தேகமுள்ளதாகவும் தெரிவித்தனர்.
அத்துடன், இங்குள்ள பிரச்சனைகளை தீர்க்க முடியாத நிலையில் புதிய பிரச்சனை இந்த மாவட்டத்தில் ஏற்படக் கூடாது. அதனால் வெளிநாட்டு அகதிகளை வவுனியாவில் தங்க வைக்க அனுமதிக்க முடியாது.
இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், நாடாளுமன்ற ஆணையாளர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் அனுப்புவதற்கும் தீர்மானிக்கப்பட்டதுடன், சாதகமான பதில் கிடைக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் பிக்குமார் தெரிவித்தனர்.
இது தொடர்பில், வவுனியா அரச அதிபர், வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோரிடமும் மனு ஓன்றினை கையளித்தனர்.
இக் கலந்துரையாடலில் பௌத்த குருமார், போதகர், இந்து மதகுரு, வவுனியா நகர சபை தலைவர், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தலைவர், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை உப தவிசாளர், நகரசபை உறுப்பினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, நீர்கொழும்பில் இருந்து பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த 35 அகதிகள் கடந்த சனிக்கிழமை இரவு முதல் வவுனியா பூந்தோட்டம் கூட்டுறவு பயிற்சி கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த அகதிகளை சட்டரீதியாக நாட்டுக்குள் அழைத்து வந்த தரப்பினர் இப்போது அந்த அகதிகள் மீது ஏன் ஒரு கரிசனையும் இல்லாமல் வாய் மூடி உள்ளனர்.அந்த அகதிகளை அவர்கள் பராமரிக்க வேனும்.அல்லது அவர்களை மேர்கத்தய நாடுகளுக்கு அனுப்பிவிட வேண்டும் மிக விரைவாக
ReplyDeleteநீ பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி ஏரிய உனைக் கேட்கும்.. நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்க காத்திருக்கும்..
ReplyDeleteஇந்த மக்களை முஸ்லீம் பகுதிகளில் வைத்து உதவ வேண்டும் பாவம் எத்தனையோ சிறுபிள்ளைகளோடு மற்றும் நோய்வாய்ப்பட்ட மக்கள் கஷ்டப்படுறார்கள் அடிக்கடி இடங்களை மாற்றிக்கொண்டு.
ReplyDelete