தாக்குதல்களுடன் தொடர்புடைய, இன்னும் சிலர் எஞ்சியுள்ளனர் - ரணில்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய இன்னும் சிலரே எஞ்சியுள்ளனர் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
“இந்த தாக்குதல்களுடன் தொடர்புடைய பலர் கொல்லப்பட்டுள்ளனர். ஏனைய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய சிலரே இன்னமும் கைது செய்யப்படாமல் உள்ளனர்.” என்றும் அவர் கூறியுள்ளார்.
எஞ்சியோர்களையும் கைது செய்து மீண்டும் இலங்கையை சமாதான பூமியாக மாற வைப்பது உங்கள் கடமை என்பதை மறந்துவிட வேண்டாம்.
ReplyDelete