Header Ads



கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு, பன்றி இறைச்சி ஊட்டப்பட்டதா..?

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை சம்பந்தமாக இரண்டு பொலிஸ் அதிகாரிகள் தொலைபேசியில் உரையாடுவது போன்ற ஒலிப்பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளதாகவும் அது உண்மையான தொலைபேசி உரையாடல் அல்ல என தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்த பொய்யான தொலைபேசி உரையாடல் சம்பந்தமாக பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இப்படியான தொலைபேசி உரையாடல் எந்த சந்தர்ப்பத்திலும் பொலிஸார் இடையில் நடக்கவில்லை.

சமூக வலைத்தளங்களில் போலியான உரையாடல் பதிவேற்றம் செய்து, மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்த முயற்சித்துள்ளதாகவும் ருவான் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.



அதேவேளை நேற்று வெள்ளிக்கிழமை (3) முதல் ஒரு ஓடியோ வெளியாகியுள்ளது. அதில் கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு பன்றி இறைச்சி உட்டப்பட்டது என்ற அர்த்தப்பட அதில் பேச்சுக்கள் தொடருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. Punish these two police officers now. Send them home.

    ReplyDelete

Powered by Blogger.