Header Ads



ஏழை முஸ்லிமின் தள்ளுவண்டி அடித்து நொறுக்கப்பட்டது - நிகவெரட்டியவில் குண்டர்கள் அடாவடி (படங்கள்)

நேற்று 28ஆம் திகதி இரவு, ஒரு ஏழை முஸ்லிம் வடைவியாபாரியின் வடைக்கரத்தை (தள்ளுவண்டி) அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

பண்ணவ கொபேகண எனும் பிரதேசத்தில் வசிக்கும் நசுர்தீன் என்பவர் நீண்டகாலமாக நிகவெரட்டிய நகரத்தின் எல்லையிலுள்ள மாகல்லேகம எனும் பிரதேசத்தில் வடை வியாபாரம் செய்து வருகின்றார். 

கடந்த 13ஆம் திகதி தாக்குதலுக்குப்பின் அவர் நேற்றைய தினம், மீண்டும் வியாபாரத்துக்கு சென்றுள்ளார். வியாபாரத்தை முடித்துவிட்டு தமது கரத்தையை வழமையாக வைக்கும் இடத்தில் வைத்துவிட்டு வீடுசென்றுள்ளார். இன்று காலை மீண்டும் வியாபாரத்துக்காக சென்ற போது தனது கரத்தை (தள்ளுவண்டி) அடித்து நொறுக்கப்பட்டுள்ளதை கண்டுள்ளார். நேற்று ஒரு சிலர் இனி வியாபாரத்துக்கு அங்கே வரவேண்டாமென்று தம்மை எச்சரித்தாகவும், அதன் பின்னரே இத்தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் நசுர்தீன் என்பவர் நிகவெரட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அன்றாடம் வடைவியாபாரத்தின் மூலம் தமது வாழ்வாதாரத்தை தேடிய ஏழை வியாபாரிக்கு நீதி கிடைக்குமா?

சாஜஹான் பாஸ்கான்


3 comments:

  1. Yaa Allah give us patience and duaa is our only hope

    ReplyDelete
  2. முஸ்லிம் என்ற காரணத்தினால் நீதி கிடைக்காது

    ReplyDelete
  3. இலங்கை நோக்கி மிகபிரமாண்டமான சுனாமி அலைகள் மிகவிரவில் அல்லாஹுவால் அனுப்பப்படுமென்று நினைக்கின்றேன்!

    ReplyDelete

Powered by Blogger.