Header Ads



அரபு மொழிக்கு இந்தநாட்டில், என்ன சம்பந்தம் என்கிறான் லிங்கநாதன்...?

இலங்கையில் மூன்று மொழிகள் தான் அரச கரும மொழிகளாக காணப்படுகின்றன. அரபு மொழிக்கும் இந்த நாட்டிற்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்பதை விசாரிக்க வேண்டும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் கொல்லபட்டவர்களிற்கான அஞ்சலி நிகழ்வு விடுதலை அமைப்புகளின் ஏற்பாட்டில் வவுனியாவில் நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஏப்ரல் 21 தாக்குதலானது தமிழ் மக்களை பொறுத்தவரை பலவிடயங்களை கற்றுக் கொள்ளகூடிய சந்தர்ப்பமாக அமைந்துள்ளது. 1915 ஆம் ஆண்டில் சிங்களமக்களால் முஸ்லிம் மக்கள் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது. அன்றிலிருந்து போர்முடிவுற்ற 2009 ஆம் ஆண்டு வரையான 94 வருடகாலப்பகுதியில் சிறுபான்மை மக்கள் இந்தநாட்டிலே வாழமுடியுமா என்ற கேள்விக்குறி இருந்து வந்தது.

கடந்த 1915 ம் ஆண்டு சிங்கள மக்களால் முஸ்லிம் மக்கள் தாக்கப்படும்போது அவர்களிற்கு ஆதரவாக தமிழ்தரப்பு செயற்படவில்லை. அது நாம் வெட்கபட வேண்டிய விடயம். அன்றைய தமிழ் தலைவர்களான சேர் பொன்.இராமநாதன், அருணாச்சலம் ஆகியோர் லண்டனிற்கு சென்று சிங்கள தலைவர்ளை காப்பாற்றும் பணியினை மேற்கொண்டார்கள். அதற்காக சிங்கள மக்கள் அவர்களை கொண்டாடி நன்றி செலுத்தியிருந்த சம்பவங்களும் நடைபெற்றிருந்தது.

ஆனால் எங்களிற்கு ஒரு நிலமை இப்படிவரும் என்பதை அன்று இருந்த தலைமைகள் சரியாக கணக்கிட்டிருந்தால் இன்றைய துர்ப்பாக்கியநிலை எமக்கு வந்திருக்காது. தமிழரசுகட்சி, தமிழர் கூட்டணியின் காலப்பகுதிகளிலே முஸ்லிம் சகோதர்கள் அரசியல் ரீதியாக எங்களோடு ஒன்றாக செயற்பட்டிருந்தார்கள். விடுதலை அமைப்புகளிலே ஒன்றாக இணைந்திருந்த சந்தர்ப்பங்களும் கூட உண்டு. இன்று இந்த அரசானது ஒரு சில தலைமைகளின் சுயநலன்களிற்காக நாட்டையே குட்டிசுவராக்கி கொண்டிருக்கும் செயற்பாட்டை மேற்கொள்கிறது.

எனவே இந்த அரசு, முப்படையினர், பொலிசாரிடம் நான் கேட்க வேண்டிய விடயம் ஒன்று இருக்கிறது. போரிற்கு பிறகு இந்த நாட்டிலே திடீர் பணக்காரராக மாறியவர்களை பற்றி விசாரியுங்கள். அவர்களிற்கு இந்த பணம் எப்படி வந்தது என்று விசாரியுங்கள். அதேபோல் இலங்கையில் மூன்றுமொழிகள் தான் அரசகரும மொழிகளாக காணப்படுகின்றது. ஆனால் அண்மையில் அரபு மொழியிலே பலகட்டடங்களின் பெயர்பலகைகள் திறக்கப்பட்டிருக்கிறது. அரபு மொழிக்கும் இந்தநாட்டிற்கும் என்ன சம்பந்தம் உள்ளது. எனவே அந்தவிடயங்கள் விசாரிக்கபட வேண்டும்.

கொல்லபட்டவர்களை கத்தோலிக்கர்களாக பார்க்க வேண்டாம். அவர்கள் முழுக்க முழுக்க தமிழர்கள். மிகதெளிவாக தாக்குதலிற்கான இடங்கள் தெரிவுசெய்யபட்டிருக்கிறது. ஒரு பௌத்த கோவிலும் இலக்கு வைக்கபடவில்லை. ஒரு சிங்கள பௌத்தனும் சாகவில்லை. வெளிநாட்டின் நிகழ்சி நிரலாக இருந்தாலும் எம்மை கருவறுக்கும் செயற்பாடாகவே இந்த தாக்குதலை பார்க்க முடியும். தற்போதை நிலையில் ஒவ்வொரு இயங்கங்களும் தம்மை சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டும்.

போராட்ட காலங்களிலே விரும்பியோ, விரும்பாமலோ பல தவறுகளை நாம் செய்திருக்கின்றோம். இனிவரும் காலங்களிலாவது நாம் ஒற்றுமையாக செயற்படுவதனூடாகத்தான் எமது மக்களை காப்பாற்ற முடியும். எனவே அனைத்து இயக்கங்களும் மனம் திறந்து பேச வேண்டும் என்றார்.

11 comments:

  1. நண்பர் லிங்க நாதனுக்கு, இலங்கைக்கும் பாளி மொழிக்கும் இலங்கைக்கும் சமஸ்கிரத மொழிக்கும் என்ன சம்பந்தமுள்ளதோ அதுபோன்ற தொடர்பு இலங்கைக்கும் அரபு மொழிக்கும் உள்ளது. இதை நீங்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  2. சமசுகிருதத்திற்கும் இலங்கைக்கும் என்ன சம்பந்தம் இனி கோயில்களில் தமிழ் மொழி மூலம் ஐயர் மந்திரம் சொல்வார்

    ReplyDelete
  3. முதலில் அவர்கள் 1915 எங்களைத் தாக்கினார்கள்.ஆனால் நீங்கலோ அவர்களுக்காக லண்டன் போய் வாதாடினீர்கல்.எனவே உங்களுக்கு ஏன் அந்த வேளையில் ஏன் இரு சமூகம் ஒரு மொழி பேசுவது தெரியவில்லை.வெட்கம் கெட்டவர்கலே வாயை மூடிக் கொண்டிருக்கல்

    ReplyDelete
  4. பகவத்கீதையும், திருக்குறளும் இந்துக்களின் ஏனைய சமயம் சார்ந்த நூல்களும் கிரந்தங்களும் அதிஷ்டவசமாக தமிழ் மொழியில் இருக்கின்றன, அதனால் இந்துக்களும் இலங்கைத் தமிழர்களும் தமிழ் மொழியை மாத்திரம் தெரிந்திருந்தால் அவர்களிள் நாளாந்த விவகாரங்களையும் சமயத்தையும் சரியாகப் பின்பற்றலாம், ஆனால் அதற்கு மாற்றமாக முஸ்லிம்கள் இந்த நாட்டில் தமிழ்மொழியைத் தங்களுடைய தாய்மொழியாக க் கொண்டிருந்தபோதிலும் அவர்களின் சமயம் சார்ந்த அனைத்து நூல்களும் கிரந்தங்களும் அரபுமொழியில் தான் இருக்கின்றன, எனவே ஒரு முஸ்லிம் அவனுடைய சமயத்தைப் பின்பற்றவும் அதனைக் கற்றுக்கொள்ளவும் அவன் அரபு மொழியைக் கற்றுக்கொள்ள நிர்பந்தப்படுத்தப்படுகின்றான், அதேநேரத்தில் அவன் ஒரு உண்மையான மனிதனாக வாழ அவனுக்கு சமயம் அவசியம் தேவைப்படுகின்றது, அதன் காரணமாகத் தான் இலங்கையில் பல இடங்களில் சமயம் சார்ந்த பள்ளிக் கூடங்களில் அரபு மொழி போதிக்கப்படுகின்றது. துரதிருஷ்டவசமாக எல்லாச் சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மொழி பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த அடிப்படை உண்மையை அறியாமல் அல்லது தெரிந்துகொள்ள விருப்பமில்லாமல் இவ்வாறு மூடத்தனமாக க் கதைப்பது வருந்தத்தக்க விடயமாகும்.

    ReplyDelete
  5. Is this person is important...?
    Just avoid them..dogs always will kuraikkattan seiyyum...

    ReplyDelete
  6. ஜெயபாலன் ஐயாவுக்கு நன்றி, இதில் இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிட்டாகனும். இன்று எமது நாட்டுக்கு கிடைக்கும் அந்நிய செலாவணியில் முதலிடம் பிடிப்பது வளைகுடா நாடுகளில் வேலைக்கு செல்பவர்களிடமிருந்து, இவர்கள் அரபு மொழியில் தேர்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பது விரும்பியோ விரும்பாமலோ கட்டாயமாக உள்ளது.

    ReplyDelete
  7. அப்படியென்றால் சமஸ்கிருத குப்பையில் இருக்கும் பகவத் கீதையை கொளுத்திவிடும்

    ReplyDelete
  8. மிகவும் இலகுவான கேள்வி. இந்துக்களுக்கும் நடனம் இசைக்கும் உள்ள தொடர்பு என்ன? ஏன் நீங்கள் இங்கு கூத்து பாட்டு எல்லாம் செய்ய வேண்டும்? அது உங்கள் சமயம் சார்ந்து. அது போல் அரபு மொழியும் முஸ்லிம்களின் சமயம் சார்ந்த விடயம்.

    ReplyDelete
  9. முஸ்லீம்கள் உலகத்தில் எங்கெல்லாம்
    வாழ்கின்றார்களோ அங்கெல்லாம்
    அறபு மொழி அவர்களால் பயன்படுத்தப்படுவது தவிர்க்கமுடியாத
    விடயமாகும்.குறிப்பாக முஸ்லீம்களின்
    நாளாந்த வணக்க வழிபாடுகளில் அரபு
    மொழி பயன்பாடு கட்டாயமானதாகும்.
    புனித திருக்கர்ஆன் அறபு மொழியிலே
    அருளப்பட்டுள்ளது பற்றியும் சகோதர் லிங்கநாதனுக்கு தெரியாது போல் இருக்கின்றது என்பதனால்தான் அவருக்கு இவ்வாறான கேள்வி உதயமாகியது என எடுத்துக்கொண்டால் அவரை குற்றம் சொல்வது குறை காண்பது இது விடயத்தில் நியாயமாகுமா?

    ReplyDelete
  10. ஜெயபாலன் அவர்களே உங்கள் நேர்மையான கருத்துக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
  11. ஜெயபாலனுக்கு அறளை பெயர்ந்து விட்டது போல தெரிகிறது. பாளி, சமஸ்கிருத்தத்தில் எல்லாம் இலங்கையில் பெயர்ப்பலகைகள், அறிவிப்பு பலகைகள் உண்டா. ஆனால் அரபுமொழியை இலங்கையில் திணிக்கின்றனர் முஸ்லீம்கள். அந்த அரபுமயமாக்கலின் விளைவே இந்தக் கொலைகள்.

    ReplyDelete

Powered by Blogger.