Header Ads



தேசத்திற்காக உயிர்நீத்த, புலனாய்வுச் சிங்கம் துவான் நிஷாம் முத்தலிப்..!


இலங்கை தேசத்திற்காக முஸ்லிம்கள் பல்வேறுபட்ட தியாகங்களைச் செய்திருக்கின்றனர் ஆனால் இன்றைய சமூகம் அவற்றை ஞாபகப்படுத்த மறந்திருக்கின்றது, , அந்தவகையில் இலங்கை இராணுவத்தில் இணைந்து  உயிர்நீத்த ஒரு  முஸ்லிம் தியாகி பற்றிய பதிவே இதுவாகும்.

#அறிமுகம்

துவான் முத்தலிப் மலே முஸ்லிம் குடும்பத்தில் 1966 july 11 ல் களுபோவலையில் பிறந்தவர்,DS சேனநாயக்க, கல்லூரியில் கற்கும்போதே விளையாட்டுத் துறையில் பல சாதனைகள் படைத்தவர்

#படையில்_இணைவு

1986 ல் Srilanka Army ல் Cadet Officer ஆக இணைந்த இவர் தியத்தலாவை பயிற்சிக்கல்லூரி, Pakistan Military Academy, போன்றவற்றில் சிறப்பு பயிற்சி பெற்றார்,பின்னர்  2nd லெப்டின்னாக 4ம் Gamunu Regiment ல் இணைந்த இவர் அவரது சிறந்த சாதுரியத்தின் காரணமாக 1989ல் லெப்டினனாக தரமுயர்வு பெற்றார், 

#சிறப்புச்_சேவை

1990 ல் இலங்கை இராணுவ புலனாய்வுப் பிரிவில் ( Military Intelligence) ன் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்,  அதிலும் பல உயர்பதவிகளை வகித்ததுடன், GSO என்ற உயர் அதிகாரியாக வட கிழக்கில் அதிக காலம் பணி புரிந்தார், 

#விஷேட_ஆற்றல்  

தமிழ், சிங்களம் ,ஆங்கிலம் போன்ற பல மொழி ஆற்றல் உடையவராக இவர் விளங்கியதால், அக்காலத்தில் இயங்கிய LTTE னரின் பல்வேறுபட்ட உளவுத்தகவல்களை இலகுவாகப் பெறக்கூடிய ஆற்றல் இவரிடம் இருந்தது, குறிப்பாக தமிழ் மொழி பரீட்சியம், இவருக்கான விஷேட சிறப்பம்சமாகும், அதனையவர் சிறப்பாகக் கையாண்டார்,  

இராணுவத்தின் பல வெற்றிகளுக்கும், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் உதவிய சிறப்பு அதிகாரியாக முத்தலிப் விளங்கினார், பின்னர் 2004ல்  கொழும்பில் உள்ள  புலனாய்வுப் பிரிவு பகுதியின் Director என்ற தரவுயர்வு பெற்றார், 

#வீரமரணம்

சமயப்பற்றும், சிறந்த குடும்ப்ப் பின்னணியையும் கொண்ட  சாறா, மலிக், என்ற, இரண்டு குழந்தைகளின் தந்தையான முத்தலிப்  தனது 38 வது வயதில் கொழும்பில் உள்ள Polhengoda என்ற தனது விட்டுக்கு அருகில் வைத்து LTTE தீவிரவாதிகளால்  சுடப்பட்டார், இவரது உடல் பூரண  இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இறக்கும்போது அவர் 19 வருட சேவையை நிறைவு செய்திருந்த்துடன்,இராணுவ உயர் விருதுகளான Rana wickrama parakkirama, North & East Operation Medal, Operation Wadamarachchi Medal, .. போன்ற பல உயர் விருதுகளைப் பெற்றிருந்தார், 

 #எமக்கான_படிப்பினை,

முத்தலிப் போன்றோர் இந்நாடு இக்கட்டான நிலையில் இருக்கும்போது, இராணுவத்தில் இணைந்து தன்சமூகத்தை மட்டுமல்ல, முழுத்தேசத்தையும் பிரிவினைவாதிகளிடம் இருந்து காக்க தம் உயிரை அர்ப்பணித்தவர்கள், இவரைப்போல தமிழ் மொழி புலமை உடையவர்களின் பஙரகளிப்பின் மூலமே இராணுவத்தினர் வடகிழக்கில் போரில் முன்னேறவும், முழு நாட்டைக்காக்கவும் முடிந்தது, 

அத்தோடு வடகிழக்கில் பயங்கரவாதிகளினால் தமிழ்பேசும் மக்கள் எதிர்நோக்கிய பல பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும், இவர் பெற்றுக்க கொடுக்கவும், அம்மக்களை அழிவில் இருந்து பாதுகாக்கவும் உதவினார், 

அந்தவகையில்  வரலாற்றில் இந்த நாட்டின் அனைத்துத் துறையிலும் முஸ்லிம்கள் பணியாற்றியது, போல யுத்த கால இலங்கைக்கும் இத்தேசத்தின் வெற்றிக்காகவும் பலர் தமது உயிரை அர்ப்பணித்துள்ளனர்,

முத்தலிபைப் போன்ற   தியாகிகளின் தியாகத்தை இன்று வரை வருடா வருடம் நமது சமூகம் நினைவு கூரத் தவறியதும், , இவ்வாறான இராணுவ   பணிகளில் முஸ்லிம் சமூகம் குறிப்பாக இளைஞர்கள் தம்மை போதியளவு இணைத்துக் கொள்ளாமையும்  இன்றைய வன்முறை, மற்றும்,முரண்பாட்டு நிலைக்கான காரணிகளில் ஒன்றாகும், 

எனவேதான் ,இனியாவது இவர்களின் சேவைகளை ஆண்டுக்கொருமுறையாவது, சமூகம் சார்பாக   நினைவு கூர்வதுடன் அவர்கள் காட்டித்தந்த வழிமுறையில் இராணுவத்தில் போதியளவு இணைந்து பணியாற்றுவதும்  முஸ்லிம் சமூகத்தின் இன்றைய  கட்டாய கடமையாகும் 

MUFIZAL ABOOBUCKER 

6 comments:

  1. Please don’t compare human with animals.

    ReplyDelete
  2. இத்தகைய கட்டுரைகள் சிங்களவர் மத்தியில் மனமாற்றத்தை உருவாக்கும்போல தெரியவில்லை. ஆனால் நிச்சயம் இலங்கை மலையகதமிழர்களை எதிரியாக்கும். ஏற்கனவே ஈஸ்ட்டர் தாக்குதலில் இலங்கை மலையக தமிழர்களே பெரிய அளவில் கொல்லபட்டும் பாதிக்கபட்டுமிருக்க தமிழ் ஆயர்களுக்கோ தலைவர்களுக்கோ முஸ்லிம்கள் அஞ்சலி செய்யாமல் சிங்கள கருதினால் மல்கம் ரஞ்சித்துக்கு மட்டுமே வருத்தம் தெரிவிக்கபட்டது என்கிற நோதல் தமிழருக்கு உள்ளது. புலஸ்தினி மதமாற்றம்செய்யபட்டு தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுத்தபட்ட நோதல் உள்ளது. தயவு செய்து இத்தகைய தமிழருக்கு எதிரான பெருமிதங்கள் ஒருபக்கத்திலும் நன்மை செய்யாது என்பதையும் எதிர்விழைவுகளுக்கே வழிவகுக்குமென்பதியும் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் உணரவேண்டும்.

    ReplyDelete
  3. what about kudu Imran?
    Real hero :)

    ReplyDelete
  4. எமது வாலிபர்கள் அதிகமானோர் நாட்டுக்காக பாதுகாப்பு துறையில் இணைய முன்வர வேண்டும்.அது எமது சமூகத்துக்கும் பல நன்மைகள் உள்ளன.

    ReplyDelete
  5. இத்தகைய கட்டுரைகள் சிங்களவர் மத்தியில் மனமாற்றத்தை உருவாக்கும்போல தெரியவில்லை. ஆனால் நிச்சயம் இலங்கை மலையகதமிழர்களை எதிரியாக்கும். ஏற்கனவே ஈஸ்ட்டர் தாக்குதலில் இலங்கை மலையக தமிழர்களே பெரிய அளவில் கொல்லபட்டும் பாதிக்கபட்டுமிருக்க தமிழ் ஆயர்களுக்கோ தலைவர்களுக்கோ முஸ்லிம்கள் அஞ்சலி செய்யாமல் சிங்கள கருதினால் மல்கம் ரஞ்சித்துக்கு மட்டுமே வருத்தம் தெரிவிக்கபட்டது என்கிற நோதல் தமிழருக்கும் தமிழ் ஊடகங்களுக்கும் உள்ளது. புலஸ்தினி மதமாற்றம்செய்யபட்டு தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுத்தபட்ட நோதல் உள்ளது. தயவு செய்து இத்தகைய தமிழருக்கு எதிரான பெருமிதங்கள் ஒருபக்கத்திலும் நன்மை செய்யாது என்பதையும் எதிர்விழைவுகளுக்கே வழிவகுக்குமென்பதையும் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் உணரவேண்டும்.

    ReplyDelete
  6. பணத்திற்காக காட்டிக் கொடுக்கும் துரோகிகள், நாளை வேறு யாரும் அதிக பணம் கொடுத்தால் நாளை தங்களையும் காட்டிக்கொடுப்பார்கள் எனும் பயத்தில் தான் சிங்களவர்கள் இப்போ நல்ல அடிபோடுகிறார்கள் போல

    ReplyDelete

Powered by Blogger.