கோட்டாபய வழக்கின் பின்னணியில், ராஜபக்ஷ குடும்பம் - அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட JVP
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளின் பின்னால், ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜே.வி.பியின் ஊவா மகாண சபை உறுப்பினர் சமந்த வித்தியாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அரச குடும்பங்களில் பெரும்பாலானவர்கள் தங்களது உறவினர்களை கொன்றுவிட்டு அரசர்களாகி இருக்கின்றனர்.
அதேநிலைமை தற்போதும் இருக்கிறது.
ராஜபக்ஷ குடும்பத்திலும் பிரச்சினைகள் இருக்கின்றன.
ஜனாதிபதி வேட்பாளருக்கான தகுதியில் கோட்டாய ராஜபக்ஷ முன்னணியில் இருந்தாலும், அவருக்கு பின்னர் இன்னும் பல ராஜபக்ஷவினர் இருக்கின்றனர்.
எனவே அவர்களில் ஒருவரே கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக வழக்கின் பின்னணியிலும் இருப்பதாக தங்களுக்கு தகவல் கிடைத்திருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment