குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில், ISIS பயங்கரவாதிகளே உள்ளனர் - பூஜித் ஜயசுந்தர
(வீரகேசரி)
நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களின் பின்னணியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளே உள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது. இதில் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கலந்துகொண்டு தற்போதைய நாட்டு நிலைவரம் தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.
இதன்போதே இந்த குண்டு வெடிப்புக்களின் பின்னணியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளே சம்பந்தப்பட்டுள்ளனர். இது விசாரணைகளிலிருந்தே தெரியவந்துள்ளது என்று பொலிஸ்மா அதிபர் எடுத்துக் கூறியிருக்கின்றார்.
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இடம்பெற்ற விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன்,குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் உறுதிபட தெரிவித்தார்.
இத்தகைய தாக்குதல்களை இல்லாதொழிப்பதற்கும் குற்றவாளிகளை கைதுசெய்வதற்கும் நடவடக்கை எடுக்கப்படுமென்றும் அவர் உறுதி தெரிவித்தார் என்றார்.
Post a Comment