அவசர கால சட்டம் நீங்கும்போது, புர்காவுக்கான தடையும் நீங்கும்
முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணியும் புர்கா ஆடைக்கான தடை தற்போது நாட்டில் அமுலிலுள்ள அவசரகால சட்டவிதிகளின் கீழேயே ஜனாதிபதியினால் விதிக்கப்பட்டுள்ளது. அவசரகால சட்ட விதிகள் முடிவுக்கு வந்ததும் புர்காவுக்கான தடையும் நீங்கிவிடும் என தெரிவித்த அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் இது தொடர்பில் சபாநாயகர் கருஜயசூரியவுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் கூறினார்.
நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகள் தீர்ந்ததன் பின்பு அவசரகால சட்டம் முடிவுக்கு வருமென்றும் அவர் தெரிவித்தார்.
நேற்று அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தலைமையிலான குழுவுக்கும் சபாநாயகர் கருஜயசூரியவுக்குமிடையிலான கலந்துரையாடலொன்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது. அமைச்சர் ஹலீம் தலைமையிலான குழுவில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக், முஸ்லிம் சமய விவகார அமைச்சின் பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரப், வக்பு சபையின் தலைவர் எஸ்.எம்.எம். யாசீன், சட்டத்தரணி இல்யாஸ் ஆகியோர் பங்குகொண்டிருந்தனர்.
இச்சந்திப்பின்போது, அவசரகால நிலைமையின் கீழேயே புர்காவுக்கு தடைவிதிக்கப்பட்டிருப்பதாகவும் முஸ்லிம் சமூகமும், மதத்தலைவர்களும், அரசியல் தலைவர்களும் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணியும் ஆடை தொடர்பில் தீர்மானமொன்றினை மேற்கொள்ளவேண்டுமெனவும் சபாநாயகர் கருஜயசூரிய வேண்டிக்கொண்டார்.
முஸ்லிம் சமூகத்தில் சிறிய எண்ணிக்கையானோரே முகத்தை மூடி அணியும் ஆடையினை அணிகின்றனர். எனவே அவர்கள் சமூகத்தினதும், ஏனைய இனமக்களினதும் பாதுகாப்பு கருதி அவ் ஆடையைத் தவிர்த்துக்கொள்வது நல்லது என அமைச்சர் ஹலீம் தெரிவித்தார்.
இதேவேளை நாட்டில் இயங்கிவரும் அரபு மத்ரஸாக்களின் செயற்பாடுகள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் நடவடிக்கைகள் தொடர்பில் சபாநாயகர் கருஜயசூரிய அமைச்சர் ஹலீமிடம் விளக்கங்களைக் கோரினார். முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணியும் புர்கா தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.
இதேவேளை நேற்று முன்தினம் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, சூரா கவுன்ஸில் மற்றும் அமைச்சர் ஹலீம் என்போருக்கிடையில் புர்கா தடை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. மக்களின் பாதுகாப்பு கருதி முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதை தவிர்த்துக் கொள்வது நல்லது எனத் தெரிவித்த அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை புர்காவை சட்ட ரீதியாக தடை செய்யத்தேவையில்லை. புர்கா அணிவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு சமூகத்தை தெளிவுபடுத்துவதாகவும் அதற்கு காலஅவகாசம் கோரியது.
கால அவகாசம் வழங்குவதை நிராகரித்த அமைச்சர் தலதா அத்துகோரள நோன்புக்கு முன்பு தீர்மானம் நிறைவேற்றவேண்டும் எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli
This comment has been removed by the author.
ReplyDeleteFirst of all, recommend the government to banned the "Shiya" schools and masjids
ReplyDelete