Header Ads



கல்முனை வைத்தியசாலையில் சடலங்கள், தற்கொலைதாரிகளே குண்டுகளை வெடிக்கச் செய்தனர் - தேடுதல் தொடருகிறது


கல்முனை - சாய்ந்தமருதுப் பகுதியில் நேற்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் மீட்கப்பட்ட சடலங்கள் கல்முனை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர மேலும் தெரிவித்தார்.


2

சாய்ந்தமருது பகுதியில் சிறப்பு அதிரடிப்படையினர் மற்றொரு மறைவிடத்தைச் சுற்றிவளைத்த போது, ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து அங்கு மோதல்கள் இடம்பெற்றன. இதன்போது தற்கொலைக் குண்டுதாரிகள் குண்டுகளை வெடிக்கச் செய்தனர்.

அந்த இடத்தை முழுமையாக சிறிலங்கா இராணுவத்தினர் சுற்றிவளைத்திருந்தனர். இரவில் தேடுதல் நடத்துவது கடினம் என்பதால் இன்று -27- காலையில் இருந்து, தேடுதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.



1 comment:

  1. ungalin ilakinal appawi muslimgalum adhihamaha pali

    ReplyDelete

Powered by Blogger.