Header Ads



நியூ­ஸி­லாந்தில் குடியேற, முஸ்­லிம்கள் விருப்பம்

நியூ­ஸி­லாந்தின் கிரைஸ்ட்சேர்ச் நக­ரி­லுள்ள இரு பள்­ளி­வா­சல்­களில் இடம்­பெற்ற தாக்­கு­தலில் 50 முஸ்­லிம்கள் உயி­ரி­ழந்­துள்ள நிலையில், அந்­நாட்டில் குடி­யேறி வாழ்­வ­தற்கு விரும்பும் வெளி­நாட்­ட­வர்­களின் எண்­ணிக்­கையில் அதி­க­ரிப்பு ஏற்­பட்­டுள்­ளமை கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

இத் தாக்­குதல் சம்­ப­வத்தைத் தொடர்ந்து நியூ­ஸி­லாந்தின் பிர­த­மரும் மக்­களும்வெளிப்­ப­டுத்­திய அனு­தாபம் மற்றும் ஆத­ரவைத் தொடர்ந்தே உல­க­ளா­விய ரீதியில் அந் நாடு தொடர்பில் நல்­ல­பிப்­பி­ராயம் ஏற்­பட்­டுள்­ள­துடன் நியூ­ஸி­லாந்தில் குடி­யேறி வாழ்­வ­தற்கும் தொழில் செய்­வ­தற்­கு­மான ஆர்­வத்­தையும் அதி­க­ரிக்கச் செய்­துள்­ள­தாக சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது.

நியூ­ஸி­லாந்து குடி­வ­ரவு அலு­வ­லக பேச்­சா­ளரின் தக­வல்­க­ளுக்­க­மைய, தாக்­கு­த­லுக்குப் பின்­ன­ரான மார்ச் 15 முதல் 24 வரை­யான காலப்­ப­கு­தியில் 6457 பேர் நியூ­ஸி­லாந்தில் குடி­யேற விண்­ணப்­பித்­துள்­ளனர். எனினும் தாக்­குதல் இடம்­பெ­று­வ­தற்கு முன்­ன­ரான 10 நாட்­களில் விண்­ணப்­பித்­தோரின் எண்­ணிக்கை 4844 ஆகும்.

இவ்­வாறு நியூ­ஸி­லாந்தில் குடி­யேற விண்­ணப்­பித்­தோரில் அதி­க­மானோர் அமெ­ரிக்­கர்­க­ளாவர். தாக்­கு­த­லுக்குப் பின்னர் 1165 அமெ­ரிக்­கர்கள் நியூ­ஸி­லாந்தில் குடி­யேற விண்­ணப்­பித்­துள்­ளனர். தாக்­கு­த­லுக்கு முன்­ன­ரான 10 நாட்­களில் 674 அமெ­ரிக்­கர்­களே விண்­ணப்­பித்­தி­ருந்­தனர். இதற்கு அடுத்த­தாக பிரிட்டன் மற்றும் தென்­னா­பி­ரிக்கா ஆகிய நாடு­களைச் சேர்ந்­தோரும் அதி­க­ளவில் விண்­ணப்­பித்­துள்­ளனர்.

இதற்­கப்பால் முஸ்லிம் நாடு­க­ளி­லி­ருந்து நியூ­ஸி­லாந்தில் குடி­யேற விரும்­பு­வோரின் எண்­ணிக்­கை­யிலும் அதி­க­ரிப்பு ஏற்­பட்­டுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. தாக்­கு­த­லுக்குப் பின்னர் 333 பாகிஸ்­தா­னி­யர்கள் விண்­ணப்­பித்­துள்­ளனர். தாக்­கு­த­லுக்கு முன்­ன­ரான 10 நாட்­களில் 65 பேரே விண்­ணப்­பித்­தி­ருந்­தனர். அதே­போன்று தாக்­கு­த­லுக்குப் பின்னர் மலே­சி­யா­வி­லி­ருந்து 165 பேர் நியூ­ஸி­லாந்தில் குடி­யேற விண்­ணப்­பித்­துள்­ளனர். தாக்­கு­த­லுக்கு முன்­ன­ரான 10 நாட்­களில் 67 பேரே விண்­ணப்­பித்­தி­ருந்­தனர்.

தாக்­குதல் நடந்த கணம் முதல் நியூ­ஸி­லாந்து பிர­தமர் ஜெஸிந்தா ஆர்டன் வெளி­யிட்ட கருத்­துக்கள், முஸ்லிம்கள் மீது அவர் காட்டிய ஆதரவு, தாக்குதல் நடந்த முதல் வாரத்திலேயே துப்பாக்கி பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கு எடுத்த நடவடிக்கை என்பன உலக மக்கள் மத்தியில் நியூஸிலாந்து தொடர்பான நல்லபிப்பிராயத்தை தோற்றுவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

1 comment:

  1. ஏன் அது அமைதி நாடாக இருப்பது பிடிக்கவில்லை போலும்

    ReplyDelete

Powered by Blogger.