Header Ads



இலங்கை வாழ் மக்களிடம், ஓர் உருக்கமான வேண்டுகோள்

இந்த நெருக்கடியான சூழலில் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்துவதை நிறுத்துவோம்; தீவிரவாதத்தையும் தீவிரவாதிகளையும் ஏலவே கண்டு கொள்ளவும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவும் தவறியமை நாம் அனைவரும் விட்ட மாபெரும் வரலாற்றுத் தவறாகும்.

எமது அசமந்தப் போக்கின் விளைவாக, விலைமதிக்க முடியாத பல அப்பாவி மனித உயிர்களை இழந்து தவிக்கின்றோம்.

இனி, உடன் செய்ய வேண்டிய விடயங்களில் கவனத்தைக் குவிப்போம்.

இலங்கையர் என்ற வகையில் பேதங்களை மறந்து இருதய சுத்தியுடன் ஒன்றிணைவோம்; தீவிரவாத விஷக் கிருமிகளை அடையாளம் கண்டு துடைத்தெறிவோம்.

நம் தாய் மண்ணை காப்பாற்ற, நாளைய தலைமுறையினர் இம்மண்ணில் அமைதியாக வாழ்வதை உத்தரவாதப்படுத்த அர்ப்பணிப்புடன் களமிறங்குவோம்; செயற்படுவோம்; சாதிப்போம்.

அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!

-அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத்-

4 comments:

  1. இஸ்லாமிய பொது அமைப்பின் கீழ் கட்டுப்பட மறுப்போரை தீவிரவாதிகள் என நாம் அடையாளப்படுத்துவோம். இலங்கைக்குப் பொருத்தமான மார்க்கத்தை மீறாத உடைகளையும் கலாசாரங்களையும் தெரிவு செய்வோம். தவறும் பட்சத்தில் தற்போதுள்ள வாழ்கை முறை தலைகீழாக மாறுவதுடன் எதிர்கால சந்ததிகள் இஸ்லாமியர் என்ற வகையில் இஸ்லாமிய பெயர்களை மட்டுமாவது வைத்துக்கொள்ள போராட்டங்கள் செய்து பல உயிர்களை இழக்கும் நிலை ஏற்படும்.

    ReplyDelete
  2. இவ்வளவு பிரபாண்டமான தியாகத்தில் உச்சத்தில் இருக்கும் நீங்கள்நேற்று மாலை முதல் கொழும்பு தேசிய வைத்தியசாலை, நீர்கொழும்பு பிரதானவைத்திய சாலைகளில் இரத்தம் தேவை என அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டது,தொடர்ந்து இலங்கைமேமன் சங்கம் ஏற்கனவே பலரை இரத்தம் கொடுக்க தயார்படுத்தி அனுப்பிக்கொண்டிருக்கின்றது. நீங்கள் எத்தனை தடவை இரத்தம்கொடுத்தீர்கள். அதற்காக உங்கள் இயக்கம் எத்தனைபேரை மேற்படி வைத்தியசாலைகளுக்கு அனுப்பி அவர்கள் இந்த நாட்டினதும் அப்பாவி மக்களை துர திருஷ்டத்துக்கு சிக்கிய மக்களுக்கு இரத்தம்கொடுத்தீர்கள் என்பதை இந்த இணையத் தளத்தினூடாக அறிய இந்த நாட்டு முஸ்லிம் சமூகம் ஆவலோடு எதிர்பாரக்கிறது. அரசியல் சார்ந்த ராஜதந்திர பதில்கள் இன்றி உண்மையை மாத்திரம் அறிய ஆவல்.

    ReplyDelete
  3. கருத்துரை சொல்லும்போதும் இயக்கவாதம், முஸ்லீங்களில் பலருடைய பிரச்சினையே இதுதான் மற்றவரை மட்டம் தட்ட எதையாவது தேடிப்பொறுக்கி மட்டம் தட்டுவது. கிராமத்தில் அதற்குச் சொல்லுவார்கள் முட்டையில் ......புடுங்கிறது என்று.

    ReplyDelete

Powered by Blogger.