Header Ads



மட்டக்களப்பு தேவாலய தாக்குதல் - 4 பேர் கைது

மட்டக்களப்பு தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலை நடத்திய சந்தேக நபரின் வாழைச்சேனை இல்லத்திற்கு சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவு அங்கு தீவிர விசாரணைகளை நடத்தி வருகிறது.

அதேபோல் மட்டக்களப்பு உணவக உரிமையாளர் ஒருவரின் மகன் – புடவை விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளர் உட்பட நான்கு பேர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .
மட்டக்களப்பு தேவாலய குண்டுவெடிப்பில் தற்கொலைதாரிகளுக்கு போக்குவரத்து வழங்கியமை குறித்து இவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது .கொழும்பில் இருந்து சென்ற ரி .ஐ.டி – எஸ்.ரி எப் உதவியுடன் கைது செய்தது.

கைது செய்யப்பட்டோர் கொழும்பு கொண்டுவரப்படுகின்றனர் . tn

No comments

Powered by Blogger.