275 கிலோ ஹெரோயினுடன், படகு பிடிபட்டது
இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் 275 கிலோ கிராம் ஹெரோயினுடன் படகு ஒன்றினை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று -22- மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த படகு கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட படகு மேலதிக விசாரணைகளுக்காக கரைக்கு எடுத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment