இறைச்சிக்காக அறுக்கப்படும் மாடுகள், தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை - டாக்டர் UL நசிர்தீன்
காத்தான்குடியில் இறைச்சிக்காக அறுக்கப்படும் மாடுகள் தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல். நசிர்தீன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது காத்தான்குடியில் இறைச்சிக்காக அறுக்கப்படும் மாடுகள் தினமும் முறைப்படி எம்மால் பரிசோதிக்கப்பட்ட பின்னரே மாடுகள் அறுப்பதற்கு அனுமதிக்கப்படுவதுடன் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் விடயம் தொடர்பில் மக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என டாக்டர் யூ.எல்.நசுறுத்தீன் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளியிடங்களிலிருந்து காத்தான்குடிக்குள் இறைச்சி கொண்டு வருவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
காத்தான்குடி மாடுகளை அறுக்கும் மடுவத்தில் மாடுகள் 24 மணி நேரம் அங்கு வைக்கப்பட்டு பரிசோதனைக்குப்பின்னரே அறுக்கப்படுகின்றன.
அத்துடன் மாடுகளை அறுப்பதற்கு ஒரு நாளைக்கு முன்பும் ஒரு மணி நேரத்திற்கு முன்பும் எமது பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே மாடுகள் அறுப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றன.
ஏனைய பிரதேசங்களில் இருந்து இறைச்சிகள் காத்தான்குடிக்கு கொண்டு வருவது முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.
வெளியூர்களில் இருந்து கொண்டு வரப்படும் இறைச்சிகளை காத்தான்குடியிலுள்ள சிற்றுண்டிச் சாலைகள், உணவகங்கள் பயன் படுத்தக் கூடாது என எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடிக்கு வெளியூரிலிருந்து கொண்டு வரப்பட்ட இறைச்சியைப் பயன்படுத்திய கடைக்காரரின் வியாபார உரிமம் தற்காலிகமாக இட நிறுத்தப்பட்டுள்ளது என மேலும் தெரிவித்துள்ளார்.
Is there any way to check beef and other meat, because some beef stalls sell meat of ass (kaluthai) as beef or mixed with beef.
ReplyDelete