Header Ads



காது கேளாத யானைகளுக்கு, வீணை வசிப்பதை போன்றது - மகிந்த

ஜனாதிபதித் தேர்தல் இந்த வருடத்தில் கட்டாயம் நடைபெறும் எனவும் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுமா என்பதில் சந்தேகம் இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதியான எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தென்மாகாணம், எல்பிட்டிய பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தோல்வியடையலாம் என்ற அச்சம் காரணமாக அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்தாது எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி மோசடி சம்பந்தமாக வழக்கு தொடருமாறு தற்போதைய அரசாங்கத்திடம் கோருவது காது கேளாத யானைகளுக்கு வீணை வசிப்பதை போன்றது. அரசாங்கம் தனது ஊழல் பற்றி பேசாது மற்றவர்களின் ஊழல் பற்றி மட்டுமே பேசுகிறது எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.