Header Ads



ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டுவிட்டார் - ரணிலும் இணக்கம் தெரிவித்துவிட்டார்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர், தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது, அதன் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள கட்சிகள் இதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளன.

எனினும் தற்போது வேட்பாளரின் பெயரை வெளியிடமுடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணங்கியுள்ளதாகவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

Powered by Blogger.