கல்முனையை துண்டாட, தமிழ் கூட்டமைப்பு முயற்சிக்கக்கூடாது - ஹரீஸ் பாராளுமன்றத்தில் வலியுறுத்து
கல்முனையை துண்டாடி, இன நல்லிணக்கத்தை குழப்ப கூட்டமைப்பு முயற்சிக்கக்கூடாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும் ராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு கல்முனை பிரதேச செயலகம் தொடர்பில் முதலில் எங்களுடன் கலந்துரையாட முன்வரவேண்டும். அவ்வாறு இல்லாமல் அரசியல் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிரதமருக்கு அழுத்தம் கொடுக்க முற்பட்டால் நாங்களும் அழுத்தம் கொடுப்போம் எனவும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் இன்று வரவுசெலவுத்திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பின் இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
முஸ்லிம்கள் தான் கிழக்கில் இனவாத்தை தூண்டுகின்றார்கள், தமிழர்கள் அல்ல
ReplyDeleteUnkalukku vadakku koduththatchu appuram why eastern neenka nalla saiveenka endu enkalukku therium to Ajan
ReplyDelete