பொருத்தமற்றவர்களுடன் கூட்டணியமைத்ததன் விளைவை, மிகத்தாமதித்தே மைத்திரிபால உணர்ந்தார்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொருத்தமற்றவர்களுடன் கூட்டணியமைத்தமையின் விளைவினை மிக தாமதித்தே உணர்ந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு எதிராக பொதுஜன பெரமுனவினர் கண்டி நகரில் மக்கள் சந்திப்பினை முன்னெடுத்திருந்தனர். இச்சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தேசிய அரசாங்கத்தின் வல்லரசாகும் பொருளாதார திட்டங்களுக்கு இடைக்கால அரசாங்கத்தின் 51 நாட்கள் தடைகளை ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிடுவது அரசாங்கத்தின் இயலாமை தன்மையினை மூடிமறைப்பதாகும் எனவும் இதன்போது குறிப்பிட்டார்.
Post a Comment