கொலையாளி சனிக்கிழமை, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுகிறான்
நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு மசூதிகளில் துப்பாக்கித்தாரிகள் நடத்திய தாக்குதலில் 49 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
28 வயதான நபர் ஒருவர் கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ளார் அவர் சனிக்கிழமையன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். மேலும் இரண்டு பேர் மீது விசாரணை நடந்து வருகிறது.
கொல்லப்பட்டவர்களில் பலர் குடியேறிகள். அதில் குழந்தைகளும் உண்டு. இருபதுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் கடுமையான காயங்களோடு உயிருக்கு போராடிவருகின்றனர்.
Post a Comment