Header Ads



இலங்கை பிக்குகள் குறித்து, பிழையான மனப்பதிவு உலகில் ஏற்படக்கூடும்

அதிகமான இளம் பிக்குகள் நாட்டில் பௌத்த சமூக சூழலொன்றையும் சிறந்த சமூகமொன்றையும் கட்டியெழுப்பும் பணியில் ஈடுபட்டுள்ள அதேநேரம், சிறியதொரு பிரிவினரின் நடவடிக்கைகளின் காரணமாக சில சந்தர்ப்பங்களில் முழு மகாசங்கத்தினரும் விமர்சனத்திற்கு உள்ளாவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

சில பிக்குகளின் மோசமான நடத்தைகள் இணையத்தளங்களினூடாக வெளியிடப்படுவதன் காரணமாக இலங்கை பிக்குகள் சமூகம் குறித்து பிழையான மனப்பதிவொன்று உலகில் ஏற்படக்கூடும் என்றும் இந்த நிலைமை பற்றி இளம் பிக்குகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நேற்று -27- பிற்பகல் மஹர, நாரங்வல ஸ்ரீ சுமணகீர்த்தி பிரிவெனாவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அன்னதான மண்டபத்தையும் புதிய மாநாட்டு மண்டபத்தையும் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  இதனைத் தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.