ராஜபக்சவினர் இடையில், பனிப்போர் ஆரம்பித்துள்ளது - பொன்சேகா
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பன எந்த வகையிலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவாலான கட்சிகள் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
களனி பிரதேசத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துக்கொண்ட பின்னர், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்..
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியாக பதவி வகித்து கொண்டே வெற்றி பெற முடியாது போனது. இதனால், எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு, ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றி பெறுவார் என அவர்கள் கூறுவது பகல் கனவு.
அதேவேளை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்படும் வேட்பாளர் தொடர்பாக ராஜபக்சவினர் இடையில் பனிப்போர் ஆரம்பித்துள்ளது எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment