லத்தீப் ஓய்வு பெறுவதைக் கொண்டாட பார்ட்டி, நடத்தியபோதே மதூஷ் மாட்டிக்கொண்டான்
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளையிடும் அதிகாரி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீப் ஓய்வு பெறுவதனைக் கொண்டாடும் வகையிலேயே மாகந்துரே மதூஷ் உட்பட அவரது சகாக்கள் டுபாய் நட்சத்திர ஹோட்டலில் கொண்டாட்டம் நடாத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதூஷின் இரண்டாவது மனைவியின் பிள்ளையின் பிறந்த நாள் கொண்டாட்டமே அன்று நடாத்தப்பட்டதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகிருந்தன.
இருப்பினும், டீ.ஐ.ஜி. எம்.ஆர்.லத்தீபினால் ஏற்படவிருந்த ஆபத்துக்கள் முடிவடைந்துள்ளது என்பதை சந்தோஷமாக கொண்டாடும் வகையிலேயே, இந்த கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
DC
Post a Comment