Header Ads



மற்றுமொரு புழு கண்டுபிடிப்பு - விவசாயத்தை நாசப்படுத்தும் என எச்சரிக்கை


சேனா என்றழைக்கப்படும் படைப்புழுவைப் போன்று, நெல் மற்றும் சோளப் பயிர்களை நாசப்படுத்தும் இன்னொரு வகை படைப்புழுவினமொன்று, திம்புலாகல - மனம்பிட்டிய பிரதேசத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நாவல் நிறத்தையுடைய இந்தப் புழுவின் உடலின் சில இடங்களில், செம்மஞ்சள் நிறமும் கலந்திருப்பதாகவும் இவை, ​நாற்று இலைகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டிதாக, அப்பிர​தேச விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இவை, நெற்கதிர்கள் மாத்திரமன்றி, நாற்று இலைகளையும் உண்வாக உட்கொண்டிருப்பதுடன் சேனா படைப்புழுவைப் போன்று, பரவிக் கிடப்பதாக, விவசாயிகள் கூறியுள்ளனர்.

No comments

Powered by Blogger.