Header Ads



புதிய அரசியலமைப்பே, ஒரே தீர்வாகும் - அனுரகுமார

நீண்டகால அரசியல் நெடுக்கடிகள் மற்றும் தீர்வுகளுக்கு புதிய அரசியல் அமைப்பே ஒரே தீர்வாகும். புதிய அரசியல் அமைப்பினை உருவாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தாம் உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார்.

 நாம் ஒருபோதும் நாட்டினை பிளவுபடுத்த விட மாட்டோம், எனினும் இந்த ஆட்சியில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் என தமிழ் மக்கள் நம்ப வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார். 

புதிய அரசியல் அமைப்பு குறித்த கருத்துக்கள் அரசியல் ரீதியாக முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாட்டினை வினவிய போதே அக் கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக இதனைக் குறிப்பிட்டார். 

 இப்போது அரசாங்கம் அபிவிருத்தி என்ற பெயரைக் கூறிக்கொண்டு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற போதிலும் இதன் பின்னணியில் முழுமையாக கடன் சுமை மட்டுமே உள்ளது. 

கடன்களில் மட்டுமே இந்த நாடு அபிவிருத்தி கண்டுள்ளது. மாறாக எந்த முதலீட்டு வேலைத்திட்டங்களும் இல்லை. ஆகவே மக்கள் இதனை சரியாக விளங்கிக்கொண்டு செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

1 comment:

  1. Yes We need to go to New chapters in this dirty politics,

    ReplyDelete

Powered by Blogger.