புதிய அரபு கல்லூரிகளை நிறுவ, தடை விதிக்கப்படும்
நாட்டில் புதிதாக அரபுக்கல்லூரிகள் நிறுவப்படுவதைத் தடைசெய்வதற்கும், தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் அரபுக்கல்லூரிகள் அனைத்தையும் வக்பு சபையின் கீழ்ப் பதிவு செய்து அவற்றைக் கண்காணிப்பதற்கும் அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் தீர்மானித்துள்ளார். அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் இது தொடர்பான அறிவுறுத்தல்களை வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.யாசீன் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக் ஆகியோருக்கு வழங்கியுள்ளார்.
நாட்டிலுள்ள அரபுக்கல்லூரிகள் தொடர்பில் அமைச்சர் ஹலீம் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டில் சுமார் 300 அரபுக்கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பல, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டதாக இல்லை. திணைக்களத்தில் பதிவு செய்து கொண்டுள்ள அரபுக்கல்லூரிகளும் ஒழுங்காக கண்காணிக்கப்படுவதில்லை. அவற்றின் செயற்பாடுகள் பற்றி அறிந்து கொள்ள முடியாதுள்ளது.
திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள மற்றும் பதிவு செய்யப்படாத அநேக அரபுக்கல்லூரிகள் வெளிநாடுகளில் இருந்து நிதியுதவிகளைப் பெற்று வருகின்றன. அந்நிதி எவ்வாறு செலவழிக்கப்படுகிறது என்றும் அறிய முடியாதுள்ளது. அதனால் புதிதாக அரபுக்கல்லூரிகள் ஸ்தாபிக்கப்படுவது நிறுத்தப்படும். தற்போதுள்ள அரபுக்கல்லூரிகள் அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
இன்றைய சூழ்நிலையில் அரபுக்கல்லூரிகள் சிலவற்றின் மீது ஏனைய சமூகம் சந்தேகம் கொண்டுள்ளது. முஸ்லிம்கள் நாட்டுப்பற்றுள்ளவர்கள், தீவிரவாதத்துக்கு எதிரானவர்கள், இஸ்லாம் நல்லிணக்கத்தையும், நல்லுறவையுமே வலியுறுத்துகிறது என்பதை நாம் நிரூபிக்க வேண்டும்.
அரபுக்கல்லூரிகளை வக்பு சபையின் கீழ் பதிவு செய்வதன் மூலம் அவற்றை கண்காணித்து அபிவிருத்தி செய்ய முடியும் என்றார்.
இதேவேளை, இலங்கை அரபுக்கல்லூரிகள் ஒன்றியத்தின் தலைவர் மௌலவி எஸ்.ஏ.எம்.ஜவுபர் கருத்து தெரிவிக்கையில் இலங்கை அரபுக்கல்லூரிகள் ஒன்றியத்தில் 217 அரபுக்கல்லூரிகள் பதிவு செய்து கொண்டுள்ளன. மேலும் 10 அரபுக்கல்லூரிகள் பதிவுக்காக விண்ணப்பித்துள்ளன.
அமைச்சர் ஹலீம் எடுத்துள்ள தீர்மானம் வரவேற்கத்தக்கதாகும். தற்போது இயங்கிவரும் அரபுக்கல்லூரிகளை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் திட்டங்களை வகுத்து உதவி செய்ய வேண்டும் என்றார். வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். யாசின் கருத்து தெரிவிக்கையில் வக்பு சபையில் அரபு கல்லூரிகளை பதிவு செய்ய அமைச்சர் எடுத்துள்ள தீர்மானம் வரவேற்கத்தக்கதாகும். இவ்வாறு பதிவு செய்வதன் மூலம் வக்பு சொத்துக்களையும் பாதுகாக்க முடியும் என்றார்.
(ஏ.ஆர்.ஏ. பரீல்)

Good decision
ReplyDeleteIt is quality what matters not quantity. poor Minister and Muslim community in SL struggle to upgrade and update Arabic college system.
ReplyDeleteHope this man will arrange salary for all staff.. running cost from government..
ReplyDeleteDo not compromise our rights... by saying no more arabic colleges. Rather creat a mechanism to help them financially by your ministry and do monitor them too. Also teach high officials to learn Tawheed and how to stay away from Shirk.
ஓர் குறிப்பிட்ட கால எல்லைக்குள் அரபு மொழி இலங்கை முஸ்லிம்களினதும் தாய் மொழியாக மாற்றப்படல் வேண்டும்.
ReplyDeleteநாம் தினமும் தொழுகையில் அரபியில் ஒதுவதனையும், புனித குர்ஆனிலிருந்து ஒதுவதனையும் பொருள் அறிந்து ஓதி, அதன் கருத்துக்களுடன் இரண்டறக் கலந்து அவற்றின் உச்ச பலனை அடைய அரபு மொழியை அறிந்திருப்பது முஸ்லிம்களுக்கு எத்துணை அவசியமானது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
இஸ்லாத்தின் ஆரம்பத்தில் அரேபியாவில் மட்டும் பேசப்பட்ட அம்மொழி அங்கிருந்து செங்கடலையும் தாண்டி வட ஆபிரிக்கவிலுள்ள அனைத்து நாடுகளிலும் ஆதிக்கம் செலுத்தி அட்லான்டிக் சமுத்திரம் வரை வியாபித்திருப்பதற்கு, நம் முன்னோர் புனித குர்ஆன் இறக்கப்பட்ட மொழிக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம்.
ஆகவே, அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாவும் முஸ்லிம் சமய விவகார அமைச்சும், அரபுக் கல்லூரிகளும் இது விடயத்தில் இணைந்து ஓர் செயல் திட்டத்தை நடைமுறைப் படுத்துவார்களாக..
மதரஸாக்கள் சம்பந்தமாக புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள சட்டங்களின் மூலம் எதிர்காலத்தில் வழங்க குறைபாட்டாலும் ஏனைய பிரச்சனைகளினாலும் மதரசாக்கள் மூடப்பட்டு விட்டால் விரல்விட்டு எண்ணக்கூடிய மதரசாக்களை மீதமாகும் இவ்வாறான ஒரு நிலையில் மீண்டும் புதிய மதரசாக்களை ஆரம்பிப்பதற்கான ஒரு சட்டமூலம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டாலும் கூட அது தோல்வியடையும் சாத்தியக்கூறுகளே அதிகம் எனவே ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேவையான மதரசாக்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டு அதனை திறம்பட நடத்துவது சாலச்சிறந்தது
ReplyDelete