Header Ads



சாய்ந்தமருது - மாளிகைக்காடு சுயேற்சைஅணியினரின் பகிரங்க அறிக்கை

கடந்தஉள்ளுராட்சிதேர்தலில் சாய்ந்தமருது - மாளிகைக்காடுமக்களின் ஏகோபித்தஅரசியல் அதிகாரத்தை ஜனநாயகரீதியாகப் பெற்றசுயேற்சைக்குழுவினராகியநாங்கள் கடந்தபெப்ரவரிமாதம் 10ஆம் திகதியிலிருந்து இன்றுவரை தனியான நகரசபைக்கான போராட்டத்தில் பலஅதிகாரங்களையும், பல்வேறு இழப்புக்களையும் சந்தித்தநிலையில்,தனியானநகர சபை என்ற இலக்கிற்காகமாத்திரம் தங்களைமுழுமையாக அர்ப்பணித்து இன்றுவரைசாய்ந்தமருதுத னியானநகரசபைக்கான போராட்டத்தில் மக்களின் ஆணையைஉறுதிப்படுத்துவதோடு, தற்போதையஅரசியல் சூழ்நிலையில் சம்பந்தப்பட்டவர்களுக்குபின்வரும் விடயங்களைமுன்வைக்கவிரும்புகின்றோம். 

01. சாய்ந்தமருதுக்கானதனியானநகரசபையை இலக்காகக் கொண்டசாய்ந்தமருது–மாளிகைக்காடுசுயேற்சைக்குழு,பள்ளிவாசல் நிருவாகம் மற்றும் எனையசமூகஅமைப்புக்களுடனும்,பொதுமக்களுடனும் இணைந்துஉள்ளுராட்சிமாகாணசபைகள் அமைச்சரைபலதடவைகள் சந்தித்துஆக்கபூர்வமானநடவடிக்கைகளைமேற்கொண்டுதனியானநகரசபைக்கானவர்த்தமானிஅறிவித்தலைவெளியிடவிருந்த இறுதிக்கட்டநிலையில் நாட்டில் ஏற்பட்டஅரசியல் அசாதாரண சூழ்நிலைகாரணமாகதடைப்பட்டதுயாவரும் அறிந்தவிடயமாகும்.

02. தற்போதையஅரசியல் சூழ்நிலையில் சாய்ந்தமருதுக்கானதனியானநகரசபைக் கோரிக்கையைமுன்னெடுத்துச் செல்வற்குதுணைநின்றகட்சிகளானமு.காமற்றும் அ.இ.ம.காஆகியனதற்போதுஅரசியல் அதிகாரத்தில் தங்களதுஉச்சநிலையைஅடைந்திருக்கின்றது. இந் நிலையில் எமதுபிரதேசமு.காவின் மூத்தபாராளுமன்றஉறுப்பினர் ஒருவர் உள்ளுராட்சிமாகாணசபைகள் இராஜாங்கஅமைச்சராகநியமனம் பெற்றிருப்பதும் எங்களுக்குசாதகமானஒருநிலையினைதோற்றுவித்திருக்கின்றபோதிலும்,கடந்தகாலங்களில் மேற்படிசம்பந்தப்பட்டஅமைச்சர்; எங்களாலும்,பள்ளிவாசல்,பொதுமக்கள்,கொழும்புவாழ் எமதுஉறவுகளாலும் மேற்கொள்ளப்பட்டதனியானநகரசபைக்கானமுன்னெடுப்புக்களைமுறியடிப்பதில் பாரியபங்கபளிப்புச் செய்துள்ளமையினையும் மறுப்பதற்கில்லை.

03 இத்தகைய சூழ்நிலையில் சுயேற்சைக்குழுஆகியநாங்கள் எங்களதுதனியானநகர சபை இலக்கைநோக்கியபயணத்தில் எத்தகையவிட்டுக் கொடுப்புக்களையும் தனியானநகரசபைக்காகசெய்யத் தயாரானநிலையில்,பள்ளிவாசல் நிருவாக சபை,உலமா சபை,வர்த்தகசங்கம்,மீனவர் சங்கங்கள்;, இளைஞர் அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புக்களும் உள்ளிட்டசாய்ந்தமருதுமாளிகைக்காடுமக்களும் அத்துடன் கொழும்புவாழ் சாய்ந்தமருதுநகரசபைக்கான இலக்கைநோக்கியதோழர்கள் மற்றும் கடல் கடந்துவாழும் எமதுஉடன் பிறப்புக்கள் அனைவரினதும் எதிர்பார்ப்பானசாய்ந்தமருதுதனியானநகரசபைக்கானவர்த்தமானிஅறிவித்தல் மிகவிரைவில் வெளியிடப்படவேண்டும் என்பதைஎதிர்பார்க்கின்றோம்.

மேலும் கடந்தகாலங்களில் அதிகாரங்களைவைத்துக் கொண்டுஎமது இலக்கானதனியானநகரசபையை இழுத்தடிப்புச் செய்ததுமட்டுமல்லாதுபலகழுத்தறுப்புக்களையும் மேற்கொண்டதுபோன்றசெயற்பாடுகளோடுஅரசியல் காய்நகர்த்தல்களைமேற்கொள்ளநினைக்கும் பட்சத்தில் அதுபகற் கனவாகவும் எதிர்காலங்களில் அத்தகையவர்களுக்குபாரியஅரசியல் பின்னடவுகளைஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. மேலும் எமது ஜனநாயகரீதியானசாய்ந்தமருதுக்கானதனியானநகர சபை போராட்டம் இறுதி இலக்கைஅடையும் வரைவலுவடைந்துசெல்வதுமட்டுமல்லாது,எங்களது ஜனநாயகரீதியானபோராட்டமுன்னெடுப்புக்களும்,வியூகங்களும் எதிர்பார்க்கப்படாதவடிவங்களில் முன்னெடுக்கப்படும் என்பதையும் அறியத் தருகின்றோம். 

ஓற்றுமையேஎமதுபலம்!
ஜனநாயகமேஎமதுபோராட்ட வழி!!
தனியானநகரசபையேஎமது இலக்கு!!!

இவ்வண்ணம்

சாய்ந்தமருது–மாளிகைக்காடு
சுயேற்சைக்குழுஉறுப்பினர்கள்,
கல்முனைமாநகர சபை மற்றும் 
காரைதீவுபிரதேச சபை.


1 comment:

  1. கல்முனை மக்கள் கல்முனைக்குடி சாய்ந்த மருது கல்முனை தமிழ் என பிழவுபட்டே சிந்திக்கிறார்கள். உறவுகளைச் சீரழித்துவிட்டு கண்ணீரும் இரத்தமுமாக பிரிந்து செல்கிற கூட்டுக் குடும்பம் போல் கல்முனை பிரிந்து சென்றால் அது வரலாற்று அவலமாகும். கல்முனை கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில் இணக்கமாக தனிக்குடித்தனங்களாகி உறவை பாதுகாத்துக் கொள்வது கல்முனைப் பிரதேச மக்களின் ஒற்றுமைக்கு மட்டுமல்ல கிழக்கு மாகாண ஒற்றுமைக்கும் சுபீட்சத்துக்கும் முக்கியமானதாகும்.கல்முனைக் குடி மக்களும் அரசியல் தலைவரான மாண்புமிகு பிரதி அமைச்சர் ஹாரிஸ் அவர்களும் கல்முனையின் கூட்டுக்குடும்ப நெருக்கடிகளை ஆராய்ந்து கருத்துக் கணிப்புகளை நடத்தி யதார்த்த நிலமைகளை அங்கீகரித்து கல்முனை கூட்டுக்குடும்பம் சுமூகமான நட்புறவுள்ள தனிக்குடும்பங்களாக மாறுவதை அங்கீகரிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete

Powered by Blogger.