ரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்
“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்ளியவர்கள் தான் நீங்கள். இன்று நாடு ஸ்தம்பிதம் அடைய கூடாதென்றே நான் இந்த முடிவுக்கு வந்தேன். கடாபி போன்ற நிலைமை எனக்கு வரும் என்று சொன்னீர்கள். முடிந்தால் அப்படி செய்யுங்கள்.”
பிரதமர் பதவிப்பிரமாணம் செய்து வைத்த பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி எம் பிக்களை வைத்துக் கொண்டு ஜனாதிபதி மைத்ரி காரசார பேச்சு.
அதன் பின்னர் அங்கு பேசிய சஜித் தம்மபதம் ஒன்றை சுற்றிக்காட்டி “வெறுப்பை வெறுப்பால் வெல்ல முடியாது... அன்பால் மாத்திரமே வெல்ல முடியும்” என்று குறிப்பிட்டாராம்..
-Sivaraja
Post a Comment