மகிந்தவை தூக்கி மைத்திரி நிலத்தில், அடித்துள்ளதாக பாராளுமன்றத்தில் தெரிவிப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தூக்கி நிலத்தில் அடித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று சபை ஒத்திவைப்பு நேர விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நித்திரை செய்துக்கொண்டிருக்கும் இடத்தில் இருந்து கீழே விழுந்தால், பெரிய பாதிப்பு ஏற்படாது. ஆனால், தூக்கி நிலத்தில் அடித்தால், மரணத்தை ஏற்படுத்தக் கூடிய காயம் ஏற்படும்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை காரணமாகவே நாட்டில் கடும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. இதனால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க அனைவரும் ஒன்றிணையுமாறு அழைக்கின்றேன்.
ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழித்தால், மகிந்த ராஜபக்சவுக்கு சாதகமான நிலைமை ஏற்படும். 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், மகிந்த ராஜபக்ச முழுமையான அதிகாரங்களுடன் கூடிய பிரதமராக பதவிக்கு வர முடியும் எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment