Header Ads



ரணில் செய்தது நாசகார வேலை - ஜனாதிபதியின் தீர்மானம் சரி - தயாசிறி

ரணிலால் மேற்கொள்ளப்பட்ட நாசகார செயலால், ஜனாதிபதியின் தீர்மானம் சரி என சிலர் கூறுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதியின் தீர்மானத்தை ஐக்கிய தேசியக் கட்சியினர் விமர்சித்தாலும், அவரது தீர்மானத்தை முற்போக்காக சிந்திக்கும் மக்கள் வரவேற்கின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பாலானோர் ஜனாதிபதியை விமர்சித்தாலும், ரணிலால் மேற்கொள்ளப்பட்ட நாசகார செயலால், ஜனாதிபதியின் தீர்மானம் சரியென சிலர் கூறுகின்றனர்.

மைத்திரி - மஹிந்த ஒன்றாக மேடை ஏறினால் ஐக்கிய தேசியக் கட்சியினால் பிரகாசிக்க முடியும் என என்னால் கூற முடியாது.

எம்மால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.