Header Ads



ஜனாதிபதிக்காக உயிரையும் கொடுப்பேன், என்றவர் பல்டி அடித்துவிட்டதாக கவலை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் உயிரையும் தருவதாக கூறி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று அணி மாறியமை ஆச்சரியமாக இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கூட்டம் இன்று -18- முடிவடைந்த பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சி தாவல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம,

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு இடத்தில் இருக்க முடியவில்லை. அவர்கள் ஆட்சி அதிகாரம் இருக்கும் பக்கத்திற்கு செல்கின்றனர். ஆனால், நான் எதிர்க்கட்சியில் மகிழ்ச்சியாக இருக்கின்றேன் என்றார்.

கட்சி தாவும் நபர்கள் கூறிவிட்டு செல்ல மாட்டார்கள். நேற்று எம்முடன் ஜனாதிபதி முன்னிலையில் உயிரையும் கொடுப்பேன் என்று கூறினார். ஆனால் இன்று நடந்தது வேறு. என்னால் எண்ணிப்பார்க்க முடியவில்லை. என்ன நடந்தாலும் யார் என்றாலும் மக்கள் செல்ல மாட்டார்கள்.

அடுத்த தேர்தலில் மக்கள் எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குவார்கள். விஜயமுனி சொய்சா தேர்தலில் தெரிவு செய்யப்படவில்லை. தேசிய பட்டியலில் வந்தவர் வெட்கம் என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.