Header Ads



கடைக்குள் பாய்ந்த, மோட்டார் வாகனம் - பெண் மரணம்

புலத்சிங்கள - ஹொரண வீதியின் 52 ஆவது கட்டைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

ஹொரண பகுதியில் இருந்து புலத்சிங்கள நோக்கி பயணித்த மோட்டார் வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த கடை ஒன்றின் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கப்படுகின்றது. 

இதன்போது குறித்த கடையில் இருந்த இரு பெண்கள் பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

வெதகேவத்த, கோவின்ன பகுதியை சேர்ந்த 55 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் மோட்டார் வாகன ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் புலத்சிங்கள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.