Header Ads



மாவனெல்லை புத்தர், சிலைகள் சேதம் - 6 பேர் கொண்ட குழுவை நியமித்த சஜித்

மாவனெல்லை உட்பட சில பிரதேசங்களில் புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கலாசார அமைச்சர் என்ற வகையில் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளார்.

கலாசார விவகார திணைக்களம், தொல்லியல் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகள் இந்த விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கலாசார அமைச்சு தெரிவித்துள்ளது.

விசாரணைகளை நடத்த ஆறு அதிகாரிகளை கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணைகளில் சேதமாக்கப்பட்ட புத்தர் சிலைகள் தொல்லியல் பெறுமதிமிக்கவை அல்ல என்பது உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.