சிரித்தபடி 11.16 க்கு பிரதமராக பதவியேற்ற ரணில் - இது 5 ஆவது முறையாகும்
ரணில் விக்கிரமசிங்க, இன்று (16) மற்பகல் 11.16க்கு இருந்த சுபமுகூர்த்த வேளையில், நாட்டின் பிரதமராகப் பதவியேற்றால்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், ஜனாதிபதி செயலகத்தில், இந்தப் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.
ரணில் விக்கிரமசிங்க, பிரதமராகச் சத்தியப்பிரமாணம் செய்யும் 5ஆவது முறை இதுவாகும்.
இந்நிகழ்வில், ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார, பாட்டலி சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன், மங்கள சமரவீர, கபீர் ஹஸீம், பி.திகாம்பரம் மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்தப் பதவியேற்பை அடுத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால், அலரி மாளிகையில் இன்று, விசேட அறிவிப்பொன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
Samanalaya samaga bambara......peni bonnata sarasei
ReplyDelete