Header Ads



பாராளுமன்றம் இன்று 1 மணிக்கு கூடுகிறது

ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் அதிகம் நம்பிக்கையுள்ளதெனக் குறிப்பிடப்படும் நம்பிக்கைப் பிரேரணை யோசனையொன்று இன்று நாடாளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான சஜித் பிரேமதாஸ, ரவி கருணாநாயக்க, அகிலவிராஜ் காரியவசம், லக்ஸ்மன் கிரியெல்ல, ராஜித சேனாரத்ன, பழனி திகாம்பரம், மங்கள சமரவீர, ரிஷாட் பதியூதின் ஆகியோரால் இந்த யோசனையில் கையொப்பமிட்டுள்ளனர்.

அத்துடன் அரசமைப்பின் பிரகாரம் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதிக்கு நாடாளுமன்றம் பிரேரிக்கும் மற்றுமொரு பிரேரணையும் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மேலும் இன்று காலை 11.30 மணியளவில் நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டமொன்று சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.

இன்றைய தினத்தில் நாடாளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய யோசனைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.

அத்துடன் இன்று நாடாளுமன்றத்தின் பொதுமக்கள் பார்வையாளர் கலரிகள் மற்றும் விசேட பிரமுகர்களுக்கான சபாநாயகர் கலரிகள் என்பன மூடப்பட்டிருக்கும் என்பதுடன் ஊடகவியலாளர்களுக்கான கலரிகள் மாத்திரமே திறக்கப்பட்டிருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.