Header Ads



நாமல் குமாரவை தேர்தலில், முன்னிருத்தும் திட்டம் எதுவும் கிடையாது

நாமல் குமாரவை நாடாளுமன்ற தேர்தலில் முன்னிருத்தும் திட்டம் எதுவும் கிடையாது என சிறிலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.

அத்துடன், வேட்பாளர்கள் யார் என்பதை வேட்பாளர் தெரிவு குழுவே தீர்மானிக்கும் எனவும் அந்த கட்சி கூறியுள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் போட்டியிட போவதாக நாமல் குமார செய்தியாளர் சந்திப்பில் இன்று தெரிவித்திருந்தார். இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையிலேயே, நாமல் குமாரவை நாடாளுமன்ற தேர்தலில் முன்னிருத்தும் திட்டம் எதுவும் கிடையாது என சிறிலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

“யார் எதுவும் சொல்லலாம், எமது கட்சியின் வேட்பாளர்கள் யார் என்பதை, எமது வேட்பாளர் தெரிவுக் குழுவே தீர்மானிக்கும். நாமல் குமாரவை போட்டியில் நிறுத்துவது குறித்து நாங்கள் ஆலோசிக்கவேயில்லை.” என அந்த கட்சி கூறியுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்டோரைப் படுகொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பாக தகவல்களை வெளியிட்ட நாமல் குமார, கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.