Header Ads



ஜனாதிபதியின் அறிவிப்புக்கு இணங்கவே செயற்படுவோம் - பாராளுமன்ற பிரதி பொதுசெயலாளர் வெளியிட்ட அறிவிப்பு..

நாடாளுமன்ற பொதுசெயலாளர்கள் அலுவலகத்தின் அதிகாரிகள், ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவிப்புக்கு அமைவாகவே செயற்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் பிரதி பொதுசெயலாளர் நீல் இந்தவெல இதனைத் தெரிவித்துள்ளார்.

16ம் திகதி வரையில் இடைநிறுத்தப்பட்டிருந்த நாடாளுமன்ற அமர்வானது, எதிர்வரும் 14ம் திகதி மீள நடத்தப்படவுள்ளது.

இதற்கான வர்த்தமானியை ஜனாதிபதி வெளியிட்டிருந்தார்.

நேற்றையதினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த சபாநாயகர், நாடாளுமன்றத்தில் ஒரு தரப்பு பெரும்பான்மையை நிரூபிக்கும் வரையில், ஏற்கனவே இருந்த கட்டமைப்பே பின்பற்றப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் நாடாளுமன்றத்தின் அலுவலர்கள், ஜனாதிபதியின் அறிவுறுத்தல்அடிப்படையிலேயே செயற்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், எதிர்வரும் 14ம் திகதி நாடாளுமன்றம் கூடும் போது,அதன் ஒழுங்குபத்திரத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் இன்னும் தங்களுக்கு அறிவுறுத்தப்படவில்லை என்று நாடாளுமன்றத்தின் பிரதி பொதுசெயலாளர் நீல் இந்தவெல தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.