Header Ads



மகிந்த அணிக்கு, தயாசிறி எச்சரிக்கை

நாட்டில் கடந்த நாட்களில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக மக்கள் அவமகிழ்ச்சியில் இருப்பதாகவும், நடந்த சம்பவங்கள் தவறானவை என மக்கள் எண்ணுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

குருணாகல், ஹெட்டிபொல பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

என்ன நடந்தது என்பது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உள்ளவர்களுக்கும் தெரியாது. அரசாங்கம் அவர்களின் அரசாங்கம் என எண்ணுகின்றனர்.

அவர்கள் நடனம் ஆடுகின்றனர். பட்டாசு வெடிக்கின்றனர். பாற்சோறு சாப்பிடுகின்றனர். இலங்கை போக்குவரத்துச் சபைக்குள் புகுந்து அங்குள்ளவர்களை தாக்குகின்றனர். அமைச்சு பதவிகளுக்கு அடிபிடிப்படுகின்றனர். அரச நிறுவனங்களுக்கு பலவந்தமாக புகுந்து பிடித்துக்கொள்கின்றனர். இந்த வேலைகளை செய்வதற்கு மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் ஒன்றை அமைக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு தேவையான வகையில் ஆட்டம் போட முடியாது எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.