Header Ads



2 வது தடவையும் தப்பிச்செல்ல முயற்சி - மொஹமட் நௌபர் தும்பறை சிறைக்கு மாற்றம்

மரணத் தண்டனைக் கைதியான மொஹமட் நௌபர் எனப்படும்  “நௌபர்” பதுளை சிறைச்சாலையிலிருந்து தும்பறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு காரணங்களுக்காகவே  இவர் மாற்றப்பட்டுள்ளதாக, நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் ​போகம்பறை சிறைச்சாலையிலிருந்து தப்பிச் செல்ல மேற்கொள்ளப்பட்ட திட்டம் கசிந்ததால், இவர் பதுளை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், பதுளை சிறைச்சாலையிலிருந்தும் தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்த நிலையிலேயே, நௌபர் தும்பறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

முன்னாள் மேல்நீதிமன்ற  நீதிபதி சரத் அம்பேபிட்டியவை கொலை செய்த குற்றச்சாட்டு தொடர்பில் பொட்ட நௌபர் உள்ளிட்ட இருவருக்கு 2004ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி மரணத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. நீதிபதியை, போலிசாரை கொலை செய்தால் விரைவில் நீதி வழங்கப்படுகின்றது, ஆனால் பொதுமக்களை கொலை செய்தால் தீர்ப்பு வரும் பொழுது பல வருடங்கள் ஆகிவிடுகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.